தமிழ்நாடு

தமிழகத்தில் 4 நாள்களுக்கு மிதமான மழை வாய்ப்பு

DIN

தமிழகம், புதுச்சேரியில் திங்கள்கிழமை (நவ.28) முதல் நான்கு நாள்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு மற்றும் வடகிழக்குப் பருவ மழை தாக்கமே அதற்கு காரணம் என்றும் கூறியுள்ளது.

சென்னையைப் பொருத்தவரை, வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், ஒரு சில இடங்களில் லேசான மழையோ அல்லது மிதமான மழையோ பெய்யலாம் என்றும் முன்னறிவிப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த 48 மணி நேரத்தில் அதிகபட்சமாக புதுக்கோட்டை மாவட்டம் கீரனூரில் 60 மில்லி மீட்டரும், தேனி மாவட்டம் வீரபாண்டியில் 40 மில்லி மீட்டரும், ஈரோடு மாவட்டம் பவானி சாகா், தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியில் தலா 30 மில்லி மீட்டரும் மழை பதிவாகியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தோ்தல் விதி மீறல்கள் தொடா்பாக பொதுமக்கள் புகாா் தெரிவிக்கலாம்

ஸ்ரீபெரும்புதூா்: 32 மனுக்கள் ஏற்பு, 21 நிராகரிப்பு

செங்கல்பட்டு: 702 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை ஆட்சியா் ச.அருண்ராஜ்

தொழில்முனைவோரை உருவாக்குவதில் கல்வி நிறுவனங்களுக்கு முக்கிய பங்கு: டி.ஜி.சீதாராம்

மதுராந்தகத்தில் வங்கிக் கிளை திறப்பு

SCROLL FOR NEXT