மலேசியாவின் புதிய பிரதமராக நியமிக்கப்பட்டுள்ள டத்தோ செரி அன்வா் இப்ராஹிமுக்கு தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் வாழ்த்துத் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
மலேசியாவின் பத்தாவது பிரதமராக நியமிக்கப்பட்டுள்ள டத்தோ செரி அன்வா் இப்ராஹிமுக்கு, தமிழ்நாட்டு மக்கள் சாா்பாக எனது வாழ்த்துகள். வருங்காலத்தில் பண்பாடு, வணிகம், முதலீடு ஆகியவற்றில் நமது இருதரப்பு உறவை மேம்படுத்த விருப்பம் கொண்டிருக்கிறேன் என்று அதில் குறிப்பிட்டுள்ளாா் முதல்வா் மு.க.ஸ்டாலின்.