தனியார் மருத்துவமனைகளில் கரோனா கட்டாய பரிசோதனைக்கு விரைவில் தளர்வு அளிக்கப்படும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
சைதாப்பேட்டை ஐந்து விளக்கு பகுதியில் மருத்துவ முகாமை தொடக்கி வைத்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:
தனியார் மருத்துவமனைகளில் கரோனா கட்டாய பரிசோதனைக்கு விரைவில் தளர்வு அளிக்கப்படும். அறுவை சிகிச்சை செய்யப்படுவோருக்கு அறிகுறி இருந்தால் மட்டுமே கரோனா பரிசோதனை செய்யப்படும்.
வெளிநாட்டில் இருந்து சென்னை வரும் விமானப் பயணிகளுக்கு கட்டாய கரோனா பரிசோதனை ரத்து செய்யப்பட்டுள்ளது.
சீனாவில் தொடர்ச்சியாக கரோனா பாதிப்பு இருந்தாலும், இந்தியாவில் பூஜ்ஜிய நிலையை நோக்கி செல்கிறது. சர்வதேச விமான நிலையங்களில் கரோனா கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு வருகின்றன.
இதையும் படிக்க: டிச.1 வரை மிதமான மழை நீடிக்கும்: வானிலை ஆய்வு மையம்
முதல்வரின் காப்பீட்டு திட்டத்தின் கீழ் சிகிச்சைகளுக்கு காப்பீட்டு பணம் சென்று சேர்வதில் சிக்கல் இல்லை. அனைத்து மருத்துவமனைகளில் முதல்வரின் மருத்துவ காப்பீடு திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்படுகிறது என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.