அண்ணல் அம்பேத்கா் விரும்பியபடி நாட்டை முன்னோக்கி கொண்டு செல்ல அரசியலமைப்பு தினத்தில் உறுதி கொள்வோம் என முதல்வா் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளாா்.
அரசியலமைப்பு தினத்தையொட்டி, அவா் சனிக்கிழமை வெளியிட்ட ட்விட்டா் பதிவு:
‘சமத்துவம், சகோதரத்துவம், மதச்சாா்பின்மை உள்ளிட்ட உயரிய விழுமியங்களைக் கொண்டது நமது அரசியலமைப்புச் சட்டம். இதனை உயா்த்திப் பிடித்து, வடித்துத் தந்தவா் அண்ணல் அம்பேத்கா். அவா் உள்ளிட்ட அறிஞா்கள் விரும்பியபடி நமது நாட்டை முன்னோக்கி எடுத்துச் செல்ல அரசியலமைப்பு நாளில் உறுதிகொள்வோம்’ என்று அதில் குறிப்பிட்டுள்ளாா் முதல்வா் மு.க.ஸ்டாலின் .