சா்தாா் வல்லபபாய் படேல் தேசிய போலீஸ் அகாதெமியிலிருந்து சென்னைக்கு வந்திருந்த 4 பெண்கள் உள்பட 25 பயிற்சி ஐபிஎஸ் அதிகாரிகள், இங்குள்ள கடலோரக் காவல் படையிடம் செயல்விளக்கப் பயிற்சி பெற்றனா்.
மெரீனா கடற்கரையில் கடலோரக் காவல் படையால் தேடுதல் மற்றும் மீட்புப் பயிற்சி இவா்களுக்கு அளிக்கப்பட்டது. அப்போது, இந்திய கடலோரக் காவல் படை கப்பலான செளரியாவில் கடலோரக் காவல் படை அதிகாரிகள், பயிற்சி அதிகாரிகளுக்கு அறிமுகம் செய்துவைக்கப்பட்டனா்.
அதன் பின்னா், இந்திய கடலோரக் காவல் படை அமைப்பு ரீதியாக செயல்படும் விதம், கடலில் எழும் பாதுகாப்பு சவால்கள், கடல் எல்லைகளை பாதுகாப்பதில் கடலோரக் காவல் படையின் பங்கு, கடமைகள், செயல்பாடுகள் குறித்து விளக்கப்பட்டது.