திருப்பதி ஏழுமலையான் கோயிலில் மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் தரிசன டிக்கெட் நாளை இணையத்தில் வெளியிடப்படுகிறது.
பிரசித்தி பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பல்வேறு மாநிலங்களிலிருந்தும் பக்தர்கள் வருகை தருவதுண்டு, இந்நிலையில் பக்தர்களின் சிரமத்தைக் குறைக்கும் வகையில் ரூ.300 தரிசன டிக்கெட்டுகள் வழங்கப்படுகிறது.
மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்டோருக்கு சிறப்பு முன்னுரிமை அளிக்கும் வகையில் சிறப்பு தரிசன டிக்கெட் ஆன்லைனில் வழங்கப்படுகிறது.
அதன்படி நவம்பர் மாதத்திற்கான ஆன்லைன் டிக்கெட் நாளை காலை 10 மணிக்கு இணையம் மூலம் வெளியிடப்படுகிறது. தரிசனத்திற்கு வரும் மாற்றுத்திறனாளி மற்றும் மூத்த குடிமக்கள் இணையத்தில் தரிசன டிக்கெட்களை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என்று தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்தனர்.