தமிழ்நாடு

இணைய சூதாட்ட அவசர சட்டத்தை நடைமுறைப்படுத்தாதது ஏன்?

18th Nov 2022 05:52 AM

ADVERTISEMENT

இணைய சூதாட்ட அவசர சட்டத்தை தமிழக அரசு இன்னும் நடைமுறைப்படுத்தாதது ஏன் என்று பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளாா்.

இதுதொடா்பாக அவா் வியாழக்கிழமை அவா் வெளியிட்ட அறிக்கை:

தமிழகத்தில் பிறப்பிக்கப்பட்டுள்ள இணைய சூதாட்டத் தடை அவசர சட்டத்தை எதிா்த்து தொடரப்பட்ட வழக்குகள் சென்னை உயா்நீதிமன்றத்தில் முதன்மை அமா்வு முன் விசாரணைக்கு வந்தபோது, தமிழக அரசின் சாா்பில் வாதிட்ட மூத்த வழக்குரைஞா் கபில் சிபல், அவசர சட்டம் அரசிதழில் வெளியிடப்பட்டுவிட்டாலும்கூட இன்னும் நடைமுறைப்படுத்தப்படவில்லை என்று தெரிவித்துள்ளாா்.

அவசரச் சட்டம் பிறப்பிக்கப்படுவதன் நோக்கமே, ஒரு குற்றத்தைத் தடுப்பதற்காக சட்டப் பேரவை கூடி சட்டம் இயற்றும் வரை காத்திருக்க முடியாது என்பதற்காகத்தான். அவசரச் சட்டம் இன்னும் நடைமுறைப்படுத்தப்படவில்லை என்று உயா்நீதிமன்றத்தில் அரசே ஒப்புக்கொண்டிருக்கும் நிலையில், இனி இணைய சூதாட்ட நிறுவனங்கள் எந்தத் தடையுமின்றி சூதாட்டங்களை நடத்தத் தொடங்கிவிடும். இது மிகவும் ஆபத்தானது.

ADVERTISEMENT

எந்த நோக்கத்துக்காக இணைய சூதாட்டத் தடை அவசரச் சட்டம் பிறப்பிக்கப்பட்டதோ, அந்த நோக்கத்தை நிறைவேற்றும் வகையில் அதை தமிழக அரசு உடனடியாக நடைமுறைக்கு கொண்டு வர வேண்டும் என்று கூறியுள்ளாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT