தமிழ்நாடு

அடேயப்பா? காலாண்டு, அரையாண்டு தேர்வு தேதிகளும் அறிவிப்பு

25th May 2022 03:00 PM

ADVERTISEMENT


சென்னை: தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு, வரும் கல்வியாண்டில் பொதுத் தேர்வு தொடங்கும் தேதி உள்ளிட்ட அறிவிப்புகளை பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் இன்று காலை வெளியிட்ட நிலையில், காலாண்டு அரையாண்டு தேர்வுகள் தொடங்கும் தேதியும் அறிவிக்கப்பட்டுள்ளது.

பள்ளிகள் திறக்கப்படும் தேதியுடனே, பொதுத் தேர்வு தொடங்கும் தேதியும் அறிவிக்கப்படுவது என்பது மாணவ, மாணவிகளுக்கு மட்டுமல்லாமல், ஆசிரியர்கள், பெற்றோர்களுக்கும் பெரும் ஆச்சரியத்தை அளித்துள்ளது.

இதையும் படிக்க..  சனிக்கிழமைகளில் விடுமுறை: பள்ளி மாணவர்களுக்கு மகிழ்ச்சி தரும் செய்தி

இந்த நிலையில், பொதுத் தேர்வுகள் தொடங்கும் தேதி மட்டுமல்லாமல், அனைத்து வகுப்புகளுக்கும் காலாண்டு, அரையாண்டுத்தேர்வு தொடங்கும் தேதி மற்றும் விடுமுறைக் காலம், விடுமுறை முடிந்து பள்ளி திறக்கும் தேதியும் இன்று வெளியிடப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

தமிழகத்தில் மாநில பாடத்திட்டத்தின் கீழ் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு காலாண்டு, அரையாண்டு தேர்வுகள்  எப்போது என்பது குறித்த விவரம்..

2022ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 23ஆம் தேதி பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு காலாண்டு தேர்வு தொடங்கும். 1 முதல் 10ஆம் வகுப்பு வரை செப்டம்பர் 26 ஆம் தேதி காலாண்டு தேர்வு தொடக்கம். செப்டம்பர் 30 தேதியுடன் காலாண்டு தேர்வு முடிவடையும்.

இதையும் படிக்க.. சென்னையை சுட்டெரிக்கும் சூரியன்: காரணம் இருக்கிறதாம்

அதுபோல, 2022ஆம் ஆண்டு டிசம்பர் 16ஆம் தேதி பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு அரையாண்டு தேர்வு தொடங்கும். டிசம்பர் 19ஆம் தேதி 1 முதல் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு  அரையாண்டுத் தேர்வுகள் தொடங்கும்.

அரையாண்டு தேர்வுகள் டிசம்பர் 23ஆம் தேதி முடிந்து 2023ஆம் ஆண்டு ஜனவரி 2ஆம் தேதி விடுமுறை முடிந்த மீண்டும் பள்ளிகள் திறக்கப்படும்.

அதுபோல, ஒன்றாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்புகளுக்கு வரும் 2023ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 20 முதல் 26ஆம் தேதி வரை இறுதித் தேர்வு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT