தமிழ்நாடு

5 நாள் பயணமாக தமிழகம் வந்தார் வெங்கையா நாயுடு

DIN

குடியரசு துணைத்தலைவர் வெங்கையா நாயுடு 5 நாள் பயணமாக தமிழகம் வந்துள்ளார். 

அவரை சென்னை விமான நிலையத்தில் ஆளுநர்  ஆர். என்.ரவி, தலைமைச் செயலாளர் இறையன்பு, அமைச்சர் சிவ. வி. மெய்யநாதன் உள்ளிட்டோர் வரவேற்றனர். 

தமிழகத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக வெங்கையா நாயுடு இன்று சென்னை வந்துள்ளார். 

குறிப்பாக வருகிற மே 28 ஆம் தேதி சென்னை ஓமந்துாரார் அரசினர் தோட்ட வளாகத்தில் முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் சிலை திறப்பு விழா நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சியில் வெங்கையா நாயுடு கலந்துகொண்டு கருணாநிதியின் சிலையை திறந்துவைத்து சிறப்புரை ஆற்றுகிறார். 

சென்னை ஓமந்தூரார் தோட்ட வளாகத்தில் பெரியார் மற்றும் அண்ணா சிலைகளுக்கு இடையே கருணாநிதி சிலை அமைக்கப்பட்டு வருகிறது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இதுவல்லவா ஃபீல்டிங்...

ரஜினி 171: படத் தலைப்பு டீசர் அறிவிப்பு!

மாயக் குரலாள்... ஸ்ரேயா கோஷல்!

சூர்யா 44: அதிகாரபூர்வ அறிவிப்பு!

அழகு பா(ர்)வை.. நேகா ஷெட்டி!

SCROLL FOR NEXT