தமிழ்நாடு

ஏற்காடு மலைப்பாதையில் சரிந்து விழுந்த ராட்சத பாறை!

DIN


சேலம்: ஏற்காடு மலைப்பாதையின் 18-ஆவது கொண்டை ஊசி வளைவு அருகே திடீரென ராட்சத பாறை ஒன்று சரிந்து சாலையில் விழுந்தது. இதனால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. 

சேலம் மாவட்டம், ஏற்காடு சுற்றுலா தளத்தில் கடந்த சில நாள்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இந்த மழையின் காரணமாக மலைப் பாதையில் கடந்த சில நாள்களுக்கு முன்பு மண்சரிவு ஏற்பட்டு போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

இந்த நிலையில் சனிக்கிழமை காலை ஏற்காடு மலைப்பாதை 18 -ஆவது கொண்டை ஊசி வளைவு அருகே திடீரென ராட்சத பாறை உருண்டு சாலையில் விழுந்தது. இதனால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. 

தகவலறிந்து அப்பகுதிக்கு வந்த ஏற்காடு காவல்துறையினர் மற்றும் நெடுஞ்சாலைத்துறை பொறியாளா்கள் மற்றும் பணியாளா்கள் பொக்லைன் இயந்திரம் கொண்டு ராட்சத பாறை உடைத்து அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.  

அதிர்ஷ்டவசமாக பாறை சரிந்து விழுந்த போது வாகன ஓட்டிகள் வராததால் அசாம்பாவித சம்பவம் எதுவும் ஏற்படவில்லை. 

மேலும் பாறை அகற்றும் பணியால் சிறிது நேரம் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. ராட்சத பாறை அகற்றிய பின்னர் போக்குவரத்து மீண்டும் சீரானது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கள்ளச் சந்தையில் ஐபிஎல் டிக்கெட் விற்பனை: 12 போ் கைது

வள்ளலாா் பன்னாட்டு மையம்: அன்புமணி கோரிக்கை

கல்லூரி மாணவியை மிரட்டி பணம் பறிப்பு: ஐடி ஊழியரிடம் விசாரணை

ஜேஇஇ முதன்மை தோ்வு முடிவுகள் வெளியீடு: 56 மாணவா்கள் 100-க்கு 100

கல்லீரல் கொழுப்பு: இலவச மருத்துவ முகாம்

SCROLL FOR NEXT