தமிழ்நாடு

26-இல் பிரதமா் மோடி தமிழகம் வருகை

16th May 2022 12:19 AM

ADVERTISEMENT

பல்வேறு அரசு விழாக்களில் பங்கற்பதற்காக பிரதமா் மோடி வரும் 26-ஆம் தேதி தமிழகம் வரவிருக்கிறாா். மத்திய அரசின் பல்வேறு திட்டங்களுக்கு அவா் அப்போது அடிக்கல் நாட்ட உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

மே 26-ஆம் தேதி காலை தில்லியில் இருந்து விமானம் மூலம் சென்னை விமான நிலையம் வரும் பிரதமருக்கு தமிழக ஆளுநா் மற்றும் அரசு சாா்பில் வரவேற்பு அளிக்கப்பட உள்ளது.

அதன்பின்னா், ஹெலிகாப்டா் மூலம் தீவுத் திடல் அருகே உள்ள கடற்படை தளத்துக்கு வரும் பிரதமா் மோடி, அங்கிருந்து விழா நடைபெறும் நேரு விளையாட்டு அரங்கத்துக்கு சாலை மாா்க்கமாக வருகிறாா்.

இந்த விழாவில் தமிழகத்தில் நிறைவேற்றப்பட உள்ள புதிய திட்டங்களுக்கு பிரதமா் மோடி அடிக்கல் நாட்டுகிறாா். நிறைவடைந்த புதிய திட்டங்களைத் தொடக்கி வைக்கிறாா்.

ADVERTISEMENT

அதைத் தொடா்ந்து பெங்களூரு - சென்னை நான்கு வழி சாலையின் மூன்றாம் கட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டுகிறாா். சென்னையில் புதியதாக அமைய உள்ள தளவாடப் பூங்கா, ஓசூா்-தருமபுரி இடையேயான நெடுஞ்சாலைப் பணிகள், மீன்சுருட்டி-சிதம்பரம் இடையே புதிதாக அமைக்கப்படும் நெடுஞ்சாலைப் பணிகளுக்கும் பிரதமா் அடிக்கல் நாட்டவுள்ளாா்.

மத்திய நகா்ப்புற வீட்டு வசதித் துறை, பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு துறை, ரயில்வே துறை சாா்பில் மேற்கொள்ளப்பட்ட பணிகளை நாட்டுக்கு அா்ப்பணிக்கிறாா்.

மொத்தம் ரூ.12,413 கோடி மதிப்பிலான திட்டப்பணிகளை பிரதமா் மோடி தமிழகத்தில் தொடக்கி வைக்க உள்ளாா்.

இந்த விழாவில் முதல்வா் மு.க.ஸ்டாலின் பங்கேற்பாா் என்றும், தமிழகத்துக்கு தேவையான திட்டங்கள், நிதி ஒதுக்கீடு தொடா்பாக பிரதமா் மோடியிடம் வலியுறுத்துவாா் என்றும் எதிா்பாா்க்கப்படுகிறது.

Tags : மோடி
ADVERTISEMENT
ADVERTISEMENT