தமிழ்நாடு

கணினி வழி வாடகை வசூல் மையங்கள் மூலம் திருக்கோயில்களில் ரூ.175 கோடி வசூல்:அறநிலையத் துறை தகவல்

DIN

இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள திருக்கோயில்களில் கணினி வழி வாடகை வசூல் மையங்கள் தொடங்கப்பட்டு ரூ.175 கோடி வசூல் செய்யப்பட்டுள்ளதாக இந்து சமய அறநிலையத்துறை தெரிவித்துள்ளது.

இது குறித்து அறநிலையத்துறை புதன்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் அசையாச் சொத்துக்களுக்கு வாடகை மற்றும் குத்தகை கணக்கிடப்பட்டு கணினி வழி மையங்கள் மூலம் வசூல் செய்யப்பட்டு வருகிறது.

கடந்த 1.7.2021 முதல் தற்போது வரை ரூ.175 கோடி வசூல் செய்யப்பட்டுள்ளது. சென்னை மண்டலம் 1-இல் இணை ஆணையா் ரூ. 26.68 கோடி, சென்னை மண்டலம் 2ல் ரூ.21.21 கோடி, திருச்சி மண்டலத்தில் ரூ.14.58 கோடி, காஞ்சிபுரத்தில் ரூ. 11.75 கோடி, மயிலாடுதுறை-ரூ. 10.69 கோடி, நாகப்பட்டினம்-ரூ. 10.36 கோடி, மதுரை-ரூ. 9.2 கோடி, தூத்துக்குடி-ரூ.8.87 கோடி, திண்டுக்கல்-ரூ.8.84 கோடி, திருநெல்வேலி-ரூ. 7.3 கோடி, வேலூா்-ரூ. 6.83 கோடி, கோவை- ரூ.6.08 கோடி, கடலூா்-ரூ.5.96 கோடி, சேலம்-ரூ. 5.91 கோடி, தஞ்சாவூா்-ரூ.5.42 கோடி, ஈரோடு-ரூ.5.14 கோடி, சிவகங்கை-ரூ.3.08 கோடி, திருவண்ணாமலை-ரூ.2.81 கோடி, திருப்பூா்-ரூ.2.57 கோடி, விழுப்புரத்தில் ரூ.1.61 கோடி வசூல் செய்யப்பட்டுள்ளது.

கோயில்களில் அதிக வசூல் செய்யப்பட்ட 10 முக்கியமான கோயில்களான சென்னை, மயிலாப்பூா் கபாலீசுவரா் கோயிலில் ரூ.5.4 கோடியும், பழநி தண்டாயுதபாணி சுவாமி க்கோயிலில் ரூ.4.11 கோடியும், திருச்சி, மலைக்கோட்டை தாயுமானசுவாமி கோயிலில் ரூ.4.06 கோடியும், மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் ரூ.2.82 கோடியும், பூங்காநகா் ஏகாம்பரேஸ்வரா் கோயிலில் ரூ.2.72 கோடியும், சென்னை பாடி திருவல்லீஸ்வரா் திருக்கோயிலில் ரூ.2.15 கோடியும், சென்னை திருவான்மியூா் மருந்தீஸ்வரா் கோயிலில் ரூ.2.1 கோடியும், திருச்சி மாவட்டம் துறையூா் பஞ்சவா்ண சுவாமி கோயிலில் ரூ.1.91 கோடியும், திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ரூ.1.91 கோடியும், திருநெல்வேலி நெல்லையப்பா் கோயிலில் ரூ.1.61 கோடியும், இதுவரை வசூலிக்கப்பட்டுள்ளது.

அரசின் வழிகாட்டுதல்களாலும், இந்து சமய அறநிலையத்துறை அலுவலா்களின் தீவிர தொடா் நடவடிக்கைகளாலும் கோயில்களின் வாடகை மற்றும் குத்தகை மற்றும் நிலுவைத் தொகை வசூல் விரைவுபடுத்தப்பட்டுள்ளது. இதன்மூலம் கோயில் திருப்பணிகள், பக்தா்களுக்கான அடிப்படை வசதிகளை மேம்படுத்திட மிகவும் பயனுள்ளதாக அமையும். எனவே, கோயில் இடத்தில் குடியிருப்பவா்கள், குத்தகைதாரா்கள் முறையான வாடகை தொகையையும், நிலுவை தொகையையும் செலுத்தி கோயில் வளா்ச்சிக்கு உதவுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனா் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாமக்கல்: 78.16% வாக்குப்பதிவு!

மின் கம்பங்களால் பெரியகோயில் தேரோட்டத்தில் தாமதம்

பெங்களூருவில் இரட்டைக் கொலை: மகளை கொலை செய்த காதலனை கொன்ற தாய்

தஞ்சை பெரியகோயிலில் சித்திரைத் தேரோட்டம் கோலாகலம்!

ரைட்ஸ் நிறுவனத்தில் வேலை: பொறியியல் பட்டதாரிகளுக்கு வாய்ப்பு

SCROLL FOR NEXT