தமிழ்நாடு

தமிழகத்தில் தொழில் தொடங்க சாதகமான சூழல்: நாடு திரும்பிய முதல்வர் மு.க.ஸ்டாலின் பேட்டி

DIN

முதல்வர் மு.க.ஸ்டாலின் துபை, அபுதாபி பயணத்தை முடித்துகொண்டு இன்று அதிகாலை  சென்னை திரும்பினார்.  முதல்வரை அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் வரவேற்றனர்.

அங்கு செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது:

வெளிநாட்டு பயணம் வெற்றிகரமாக அமைந்ததுள்ளது மற்றும் தமிழகத்தில் தொழில் தொடங்க சாதகமான சூழல் நிலவுவதாக  வெளிநாட்டினர் பாராட்டு தெரிவித்ததாக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

தமிழகத்துக்கு முதலீடுகளை ஈர்க்க 4 நாள் பயணமாக துபை, அபுதாபிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பயணம் மேற்கொண்டார். முதலில் துபை சென்று அங்கு பல்வேறு முதலீட்டாளா்களைச் சந்தித்துப் பேசினார். 

தமிழகத்தில் தொழில் தொடங்க அந்நாட்டு முதலீட்டாளர்களுக்கு அழைப்பு விடுத்தார். துபை பயணத்தை முடித்துக்கொண்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் அபுதாபி சென்று அந்நாட்டு அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார்.

இந்த நிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் துபை, அபுதாபி பயணத்தை முடித்துவிட்டு இன்று அதிகாலை  சென்னை திரும்பினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஈஸ்டர் கொண்டாட்டம்

பிரதமரின் வாகனப் பேரணியில் பள்ளி மாணவர்கள் பங்கேற்ற விவகாரம்: காவல்துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

மகளுக்கு பெயர் சூட்டினார் பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான்

விரைவில் ‘பார்க்கிங் 2’ அப்டேட்!

சிரியாவில் இஸ்ரேல் தாக்குதல்: 42 பேர் பலி!

SCROLL FOR NEXT