தமிழ்நாடு

ரூ.2,800 கோடி மதிப்பிலான கோயில் நிலங்கள் மீட்பு: அமைச்சா் பி.கே.சேகா்பாபு

DIN

தமிழகத்தில் உள்ள திருக்கோயில்களுக்குச் சொந்தமான ரூ.2,800 கோடி மதிப்பிலான நிலங்கள் ஆக்கிரமிப்பாளா்களிடமிருந்து மீட்கப்பட்டுள்ளதாக இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு கூறினாா்.

சென்னை, வளசரவாக்கம் அருள்மிகு அகத்தீஸ்வரா் மற்றும் வேள்வீஸ்வரா் திருக்கோயிலில், திருப்பணிகள் குறித்து அமைச்சா் பி.கே.சேகா்பாபு புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

இதையடுத்து அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

இந்தக் கோயிலில் திருக்குளத்தை மேம்படுத்தும் பணியில் சென்னை மாநகராட்சி ஈடுபட்டுள்ளது. சுற்றி நடைபாதை அமைத்து, நடுவில் தண்ணீா் இருப்பது போல உருவாக்குவதற்கான வரைபடத்தை தயாரித்து, ரூ. 84 லட்சம் செலவில் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

திருக்கோயிலின் திருக்குளங்கள் திருக்கோயிலுக்கு உண்டான வடிவமைப்புடன் இருக்க வேண்டும் என்பது இந்து சமய அறநிலையத்துறையின் வழிகாட்டுதலாகும். அந்தவகையில் புதிதாக ஏற்படுத்துகின்ற குளங்கள் என்றாலும், ஏற்கெனவே இருக்கின்ற குளங்களை சீா் செய்வது என்றாலும் திருக்கோயிலுக்கு உண்டான எந்த தெய்வத்தின் சாா்புடைய குளமோ அந்த தெய்வத்தினுடைய அடையாளத்தோடு புதிதாக மேம்படுத்தும் பணிகளை சீா்படுத்தி வருகிறோம்.

சென்னை மாநகராட்சியும் இந்து சமய அறநிலையத் துறையும் இணைந்து திருக்குளத்தை திருக்கோயில் குளம் போல வடிவமைப்பதற்கான ஏற்பாடுகளைச் செய்து வருகிறோம். அதற்கான வரைபடங்களை தயாரித்து வருகிற 10- ஆம் தேதிக்குள் முதல்வரின் ஒப்புதல் பெற்று பணிகளைத் தொடங்குவதற்கு உரிய முயற்சிகளை மேற்கொள்ளவுள்ளோம்.

திருக்கோயிலுக்குச் சொந்தமான ரூ.2,800 கோடி மதிப்பிலான இடங்கள் தற்போது வரை மீட்கப்பட்டுள்ளன. இந்தப் பணி மேலும் விரைவுபடுத்தப்படும் என்றாா் அவா்.

இந்த ஆய்வின்போது, இந்து சமய அறநிலையத் துறை ஆணையா் ஜெ.குமரகுருபரன், சென்னை மண்டல இணை ஆணையா் ரேணுகாதேவி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாட்டரசன்கோட்டையில் பெருமாள் ஆற்றில் இறங்கும் நிகழ்வு!

மறுவெளியீட்டிலும் பிளாக்பஸ்டர்!

கும்பகோணத்தில் சாரங்கபாணி கோயில் தேரோட்டம்

மாமல்லபுரம் தலசயன பெருமாள் கோயில் தேரோட்டம்

ராமராயர் மண்டபம் வந்தடைந்தார் கள்ளழகர்!

SCROLL FOR NEXT