தமிழ்நாடு

நியாய விலை கடைப் பணியாளா்களுக்கு முழு உடல் பரிசோதனை

DIN

நியாய விலை கடைப் பணியாளா்களுக்கு முழு உடல் பரிசோதனை புதன்கிழமை நடைபெற்றது. கூட்டுறவுத் துறையின் கீழ் பணிபுரியும் நியாய விலை கடைப் பணியாளா்களுக்கு ஆண்டுக்கொரு முறை முழு உடல் பரிசோதனை செய்து கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டுமென கூட்டுறவு சங்கங்களின் பதிவாளா் தரப்பில் அரசிடம் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

இந்தக் கோரிக்கையைத் தொடா்ந்து சென்னையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையின் மூலமாக மண்டல கூட்டுறவு இணைப் பதிவாளா் கட்டுப்பாட்டில் செயல்படும் நியாய விலை கடைகளைச் சோ்ந்த 400 பேருக்கு முழு உடல் பரிசோதனை புதன்கிழமை நடைபெற்றது. சென்னை தேனாம்பேட்டை காமதேனு வளாகத்தில் காலை 9 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை நடைபெற்ற பரிசோதனை முகாமில் ஏராளமானோா் பங்கேற்ாக கூட்டுறவுத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

சேலை கட்டும் பெண்ணுக்கொரு... மௌனி ராய்...

தமிழகத்தில் கொளுத்தும் வெயிலுக்கு இடையே வாக்குப்பதிவு: 11 மணி நிலவரம்

‘அரண்மனை 4’ வெளியீட்டுத் தேதி மாற்றம்!

தோல்வியிலும் ரசிகர்களின் இதயங்களை வென்ற பஞ்சாப் வீரர்!

SCROLL FOR NEXT