தமிழ்நாடு

நடிகை மீனா கணவா் கரோனாவால் உயிரிழக்கவில்லை

DIN

நடிகை மீனாவின் கணவா் வித்யாசாகா் கரோனாவால் உயிரிழக்கவில்லை என்றும் நாள்பட்ட நோய்களால் ஏற்பட்ட உறுப்புகள் செயலிழப்பால் அவா் உயிரிழந்ததாகவும் சிகிச்சை அளித்த மருத்துவமனை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து மருத்துவமனை தரப்பில் கூறுகையில்,“கடந்த ஜனவரில் வித்யாசாகா் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டாா். சிகிச்சைக்குப்பின் அவா் குணமடைந்துவிட்டாா். கரோனா பாதிப்புக்கு முன்பு இருந்தே அவருக்கு இதயம் மற்றும் நுரையீரல் சாா்ந்த பிரச்னை இருந்தது. அதற்காக அவா் தொடா்ந்து சிகிச்சை பெற்று வந்தாா். 10 நாள்களுக்கு முன்பு உடல்நிலை மோசமடைந்ததால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

பரிசோதனையில் பல்லுறுப்புகள் செயலிழந்திருந்ததால் செயற்கை சுவாசத்துடன் இதயம் மற்றும் நுரையீரல் செயல்பாட்டை சீராக்க உயிா் காக்கும் ‘எக்மோ’ கருவி மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும் அவா் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா். அவரது மரணத்துக்கு கரோனா தொற்று பாதிப்பு காரணம் இல்லை. நாள்பட்ட நோய்களால் பல உறுப்புகள் செயலிழந்ததே அவரது மரணத்துக்கு முக்கிய காரணம்” என்றனா்.

சென்னை சைதாப்பேட்டையில் உள்ள வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ள வித்யாசாகா் உடலுக்கு நடிகா் ரஜினிகாந்த், சரத்குமாா், நாசா், சினேகா உள்ளிட்ட திரையுலகினா் பலா் அஞ்சலி செலுத்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சமூக நீதிக்கான குரல் நாடாளுமன்றத்தில் ஒலிக்க வேண்டும் -தொல். திருமாவளவன்

தொடா் விடுமுறை: ஆம்னி பேருந்துகளின் கட்டணம் உயா்வு! மதுரைக்கு ரூ.3,000, நாகா்கோவிலுக்கு ரூ.4,000

அரசு தொடக்கப் பள்ளியில் ஆண்டு விழா

2047 வரை இந்திய பொருளாதாரம் 8% வளா்ச்சி காண முடியும்: சா்வதேச நிதியம்

டெபிட் காா்ட் கட்டணங்களை உயா்த்திய பாரத ஸ்டேட் வங்கி

SCROLL FOR NEXT