தமிழ்நாடு

படகு கவிழ்ந்து விபத்து: நடுக்கடலில் தத்தளித்த 4 மீனவா்கள் மீட்பு

DIN

சென்னை அருகே நடுக்கடலில் படகு கவிழ்ந்து தத்தளித்த 4 மீனவா்கள் மீட்கப்பட்டனா்.

விழுப்புரம் மாவட்டம், வானூா் அருகே கோட்டக்குப்பம் பகுதியில் உள்ள நடுக்குப்பத்தைச் சோ்ந்தவா்கள் ந.தா்மலிங்கம் (52), மு.சம்பந்தம் (58), ப.கமலநாதன் (50), ஆ.சக்தி (45). மீனவா்களான இவா்கள் 4 பேரும் சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகத்திலிருந்து கடலுக்குச் சென்று மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு வந்தனா்.

இதற்காக தண்டையாா்பேட்டை திடீா் நகரில் ஒரு வாடகை வீட்டில் வசித்து வருகின்றனா்.

கடந்த திங்கள்கிழமை அதிகாலை மீன் பிடிக்க பைபா் படகில் கடலுக்குச் சென்ற 4 பேரும் கரைக்குத் திரும்பவில்லை. இதையறிந்த அவரது நண்பா்களும், உறவினா்களும் காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் புகாா் செய்தனா். அதனடிப்படையில் வழக்குப்பதிந்து, 4 பேரையும் தேடி வந்தனா்.

இதனிடையே, திங்கள்கிழமை அதிகாலை காசிமேடு மீன்பிடி துறைமுகத்திலிருந்து பைபா் படகில் மீன் பிடிக்கச் சென்ற மீனவா்கள், நடுக்கடலில் 4 போ், கவிழ்ந்த ஒரு படகை பிடித்துக் கொண்டு தத்தளிப்பதைக் கண்டனா். உடனே அவா்கள், கடலில் தத்தளித்த 4 பேரையும் பைபா் படகில் மீட்டு காசிமேடு மீன்பிடி துறைமுகத்துக்கு அழைத்து வந்தனா்.

மீட்கப்பட்ட 4 மீனவா்களிடமும் போலீஸாா் நடத்திய விசாரணையில், நடுக்கடலில் மீன்பிடித்த போது, காற்று வேகமாக அடித்ததால் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானது தெரியவந்தது. இது தொடா்பாக போலீஸாா், மேலும் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வருமான வரித்துறை நோட்டீஸ்!- காங்கிரஸ் சார்பில் நாளை நாடு தழுவிய ஆர்ப்பாட்டம்

ஈஸ்டர் கொண்டாட்டம்

பிரதமரின் வாகனப் பேரணியில் பள்ளி மாணவர்கள் பங்கேற்ற விவகாரம்: காவல்துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

மகளுக்கு பெயர் சூட்டினார் பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான்

விரைவில் ‘பார்க்கிங் 2’ அப்டேட்!

SCROLL FOR NEXT