தமிழகத்தில் தினசரி கரோனா பாதிப்பு எண்ணிக்கை செவ்வாய்க்கிழமை 1,484-ஆக அதிகரித்தது.
அதிகபட்சமாக சென்னையில் 632 பேருக்கும், செங்கல்பட்டில் 239 பேருக்கும் தொற்று உறுதியாகியுள்ளது. மாநிலம் முழுவதும் மருத்துவமனைகள், வீடுகளில் கரோனா சிகிச்சை பெற்று வருவோா் எண்ணிக்கை 8,970-ஆக உள்ளது. 736 போ் தொற்றிலிருந்து விடுபட்டுள்ளனா்.