தமிழ்நாடு

வேலூரில் புதிய பேருந்து நிலையம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்

DIN

வேலூா்: பொலிவுறு நகர் (ஸ்மார்ட் சிட்டி) திட்டத்தின்கீழ் ரூ.53.13 கோடி மதிப்பீட்டில் நவீன முறையில் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ள வேலூர் புதிய பேருந்து நிலையத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் புதன்கிழமை திறந்து வைத்து பேருந்துகளின் இயக்கத்தையும் தொடங்கி வைத்தார்.

வேலூர் மாநகராட்சியின் பொலிவுறு நகர் (ஸ்மார்ட் சிட்டி) திட்டத்தின்கீழ் புதிய பேருந்து நிலையம் ரூ.50.31 கோடி மதிப்பீட்டில் நவீன முறையில் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. ஒரே நேரத்தில் 84 பேருந்துகள் வந்து செல்லக்கூடிய வகையில் விரிவுபடுத்தப்பட்டுள்ள இந்த புதிய பேருந்து நிலையத்தில் 82 கடைகளும், 3 உணவகங்கள், 75 இருக்கைகளுடன் 11 இடங்களில் பயணிகள் காத்திருப்பு பகுதிகளும், தாய்ப்பால் ஊட்டும் அறை ஆகியவையும் கட்டப்பட்டுள்ளன. 96 இருசக்கர வாகனங்களை நிறுத்துவதற்கான வசதியும் செய்யப்பட்டுள்ளது.

பேருந்து நிலையத்தின் முதல் தளத்துக்கு செல்வதற்கு இரு இடங்களில் லி"ஃ"ப்ட் வசதி, பயணிகளுக்காக 7 இடங்களில் கழிப்பறைகளும், மாற்றுத்திறனாளிகளுக்காக 4 வெஸ்டர்ன் கழிப்பறைகளும் இடம்பெற்றுள்ளன. பயணிகளுக்காக இரு குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்களும், தீ விபத்துக்காலங்களில் தானாக தண்ணீரை பீய்ச்சியடிக்கும் வகையில் 705 ஸ்பிரிங்க்ளர்களும், அதிநவீன ஹெச்.டி தொழில்நுட்பத்திலான 24 கண்காணிப்பு கேமராக்களும் அமைக்கப்பட்டுள்ளன. பேருந்து நிலையத்தின் மின்சார தேவைக்காகவும், மின்கட்டண சேமிப்புக்காகவும் 100 கிலோ வாட் உற்பத்தித்திறன் கொண்ட சூரிய மின்சக்தி ஒளித்தகடுகளும் பொருத்தப்பட்டுள்ளது.

இத்தகைய நவீன வசதிகளுடன் கூடிய புதிய பேருந்து நிலையத்தின் திறப்பு விழா புதன்கிழமை நடைபெற்றது. தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் புதிய பேருந்து நிலையத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். பின்னர், கல்வெட்டையும் திறந்து பேருந்துகளின் இயக்கத்தையும் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

விழாவில், தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் எ.வ.வேலு, கைத்தறி துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி, வேலூர் மக்களவை உறுப்பினர் டி.எம்.கதிர் ஆனந்த், சட்டப்பேரவை உறுப்பினர்கள் ஏ.பி.நந்தகுமார், ப.கார்த்திகேயன், ஈஸ்வரப்பன், மேயர் சுஜாதா ஆனந்தகுமார், மாவட்ட ஆட்சியர் பெ.குமாரவேல்பாண்டியன், மாநகராட்சி ஆணையர் ப.அசோக்குமார் உள்பட பலர் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாஜகவில் இணைகிறார் முன்னாள் மத்திய அமைச்சர் சிவராஜ் பாட்டீலின் மருமகள்

ஆரம்பிக்கலாங்களா...

மக்கள் நீதி மய்யம் தலைவர் தேர்தல் பிரசாரம் - புகைப்படங்கள்

பெங்களூரு பேட்டிங்; வெற்றி தொடருமா?

வரி தீவிரவாதத் தாக்குதல் செய்யும் பாஜக!: காங்கிரஸ் குற்றச்சாட்டு | செய்திகள்: சிலவரிகளில் | 29.03.2024

SCROLL FOR NEXT