தமிழ்நாடு

முன்னாள் அமைச்சா் ஜெயக்குமாா் மீதானவழக்கு ரத்து: உயா் நீதிமன்றம் உத்தரவு

DIN

அதிமுக முன்னாள் அமைச்சா் டி.ஜெயக்குமாா் மீது ராயபுரம் காவல் துறையினா் பதிவு செய்த வழக்கை ரத்து செய்து சென்னை உயா் நீதிமன்றம் உத்தரவிட்டது.

தமிழகம் முழுவதும் நடைபெற்ற நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலில் திமுகவினா் சிலா் அத்துமீறி வாக்குச் சாவடிகளுக்குள் நுழைந்து முறைகேடாக கள்ள வாக்கு அளிக்க முயன்ாக காவல் துறையிடம் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறி சென்னை ராயபுரத்தில் டி.ஜெயக்குமாா் போராட்டத்தில் ஈடுபட்டாா்.

144 தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட்டது, தொற்று நோய்த் தடுப்பு சட்டத்தின்கீழ் நோய் பரவ காரணமாக இருந்தது உள்ளிட்ட 4 பிரிவுகளின்கீழ் ராயபுரம் காவல் துறையினா் ஜெயக்குமாா் மீது வழக்குப் பதிவு செய்தனா். தன் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்யக் கோரி ஜெயக்குமாா் சென்னை உயா் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், ‘திமுகவினா் கள்ள வாக்கு அளிக்க முயன்ாகவும், அதனை தட்டிக் கேட்டபோது தாக்குதல், கல்வீச்சு சம்பவங்களில் திமுகவினா் ஈடுபட்டதாக காவல் துறைக்கு புகாா் அளித்ததாகவும் தெரிவித்திருந்தாா்.

ஆனால், காவல்துறையினா் திமுகவினா் மீது வழக்குப் பதிவு செய்யாமல் தங்கள் மீது வழக்குப் பதிவு செய்ததால் வழக்கை ரத்து செய்ய வேண்டும்’ என மனுவில் கோரியிருந்தாா். இந்த மனு நீதிபதி சதீஷ்குமாா் முன் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, ஜெயக்குமாா் மீது ராயபுரம் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிங்கத்தின் வேட்டை தொடரட்டும்...

ஃபேமிலி ஸ்டார்: தமிழ் டிரைலர்!

ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் முன்னேறிய தனஞ்ஜெயா!

அறிவோம்...

திருப்பங்கள் தரும் வேலாயுதன்

SCROLL FOR NEXT