சென்னை: தமிழகத்தில் விருப்ப ஓய்வு பெறும் அரசு ஊழியர்களுக்கான புதிய வெயிட்டேஜ் முறை குறித்த அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில், அரசு ஊழியர்களின் ஓய்வுபெறும் வயது 60 ஆக உயர்த்தப்பட்டநிலையில் வெயிட்டேஜ் கணக்கீட்டுமுறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இதையும் படிக்க.. ரோட்டுக் கடையில் சாப்பிடுகிறவரா நீங்கள்? ஆபத்தை அறிந்துகொள்ள...
அதன்படி, 56 வயதில் ஓய்வுபெறும் அரசு ஊழியர்களுக்கு 4 ஆண்டுகள் வெயிட்டேஜ் கொடுக்கப்படும். 57 வயதில் ஓய்வு பெற்றால் 3 ஆண்டுகள் வெயிட்டேஜ் கொடுக்கப்பட்டு, ஓய்வூதியம் வழங்கப்படும் என்று அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.