தமிழ்நாடு

மணப்பாறை நகராட்சி நகர்மன்ற தலைவர் பதவியை ராஜிநாமா செய்தார் அதிமுக கவுன்சிலர்!

DIN

மணப்பாறை நகராட்சி நகர்மன்ற தலைவர் பதவியை ராஜிநாமா செய்தார் அதிமுக கவுன்சிலர் பா.சுதா. 

திருச்சி மாவட்டம், மணப்பாறை நகராட்சிக்கு நடந்து முடிந்த நகர்மன்ற தலைவர் தேர்தலில் 11 வார்டு உறுப்பினர்களை மட்டுமே வைத்துள்ள அதிமுக 15 வாக்குகள் பெற்று நகர்மன்ற தலைவர் பதவியை கைப்பற்றியது. 

இதில், 18-ஆவது வார்டு அதிமுக உறுப்பினரான பா.சுதா வெற்றி பெற்று நகர்மன்ற தலைவரானார். இது திமுக வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 

அதைத்தொடர்ந்து ஆத்திரமடைந்த திமுவினவர் துணைத்தலைவர், குழு உறுப்பினர்கள் தேர்தல்களை புறக்கணித்ததால், எந்த தேர்தலும் நடைபெறாத நிலையில், நகர்மன்ற கூட்டமும் நடைபெறவில்லை. 

கடந்த 3 மாதங்களாக இந்நிலை நீடித்து வந்த நிலையில், திங்கள்கிழமை தனது நகர்மன்ற தலைவர் பதவியை பா.சுதா திடீரென ராஜிநாமா செய்துள்ளார். 

இதற்கான கடிதத்தை நகராட்சி ஆணையர் சி.என்.சியாமளாவிடம் தற்போது அளித்தார். கடிதத்தை பெற்றுக்கொண்ட நகராட்சி ஆணையர், பா.சுதாவின் ராஜிநாமா ஏற்றுக்கொள்ளப்பட்டதாக தெரிவித்துள்ளார். 

சொந்த காரணங்களுக்காக தனது நகர்மன்ற தலைவர் பதவியை ராஜிநாமா செய்துள்ளதாக பா.சுதா கடித்தத்தில் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மெட்ரோ பணி: சென்னையில் 2 நாள்களுக்கு குடிநீர் விநியோகம் நிறுத்தம்!

ரெட்ட தல படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு - புகைப்படங்கள்

கட்டணக் குறைப்பு: ஜியோ சினிமாவின் திட்டம் என்ன?

குருப்பெயர்ச்சி பலன்கள் - மீனம்

180 நாள்களை நிறைவு செய்த 12த் பெயில்!

SCROLL FOR NEXT