தமிழ்நாடு

அதிமுக தலைமை நிர்வாகிகள் கூட்டம் சட்டரீதியாக செல்லும்: பொன்னையன்

DIN


அதிமுக தலைமையகத்தில் இன்று திங்கள்கிழமை நடைபெற்ற தலைமை நிர்வாகிகள் கூட்டம் சட்டரீதியாக செல்லும் என்று முன்னாள் அமைச்சர் பொன்னையன் தெரிவித்தார். 

ஒற்றைத் தலைமை விவகாரம் தொடர்பாக மேற்கொள்ளப்பட வேண்டிய அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து விவாதிப்பதற்காக அதிமுக தலைமை அலுவலகத்தில் தலைமைக் கழக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்  எடப்பாடி கே.பழனிசாமி தலைமையில் நடைபெற்று முடிந்தது. 

அதிமுக தலைமை நிர்வாகிகள் கூட்டத்துக்கு பின்னர் வெளியே வந்த முன்னாள் அமைச்சர் பொன்னையன் செய்தியாளர்களிடம் பேசினார். 

அப்போது, அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் பொதுவான கட்சி நடவடிக்கைகள் குறித்து விவாதித்தோம். இன்று  நடைபெற்ற கூட்டம் சட்டரீதியாக நடைபெற்ற கூட்டம்.  கூட்டத்தை கூட்ட தலைமை நிலைய செயலாளருக்கு அதிகாரம் உள்ளது. 

இன்று நடைபெற்ற கூட்டம் சட்ட ரீதியாக செல்லும் என்று பொன்னையன் கூறினார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சன் ரைசர்ஸுக்கு எதிராக ஆர்சிபி பேட்டிங்!

‘ஹீராமண்டி’ சிறப்புக் காட்சியில் பிரக்யா!

பாஜகவுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்! | செய்திகள்: சிலவரிகளில் | 25.4.2024

விஷாலின் ரத்னம்: இந்த வாரம் திரையரங்குகளில் வெளியாகும் படங்கள்!

”மோடி எந்த வேற்றுமையும் பார்ப்பதில்லை!”: தமிழிசை சௌந்தரராஜன்

SCROLL FOR NEXT