தமிழ்நாட்டில் பிளஸ் 1 தேர்வு முடிவுகள் நாளை திங்கள்கிழமை(ஜூன் 27) ஆம் தேதி காலை 10 மணிக்கு வெளியிடப்படும் என்று அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.
தமிழ்நாடு முழுவதும் 11-ஆம் வகுப்பு பொதுத்தேர்வை மொத்தம் 8,83,882 பேர் எழுதினர். ஏற்கெனவே பத்து மற்றும் பன்னிரென்டாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் கடந்த ஜூன் 20-ஆம் தேதி வெளியானது.
இந்நிலையில், பிளஸ் 1 தேர்வு முடிவுகள் நாளை திங்கள்கிழமை (ஜூலை 27) ஆம் தேதி காலை 10 மணிக்கு வெளியிடப்படும் என்று அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.
இதையும் படிக்க | சிறு, குறு, நடுத்தர தொழில்களை ஊக்குவிக்க முயற்சிகள்: மு.க.ஸ்டாலின்
தேர்வு முடிவுகளை ww.tnresults.nic.in, www.dge.tn.nic.in மற்றும் www.dge.tn.gov.in ஆகிய இணையதளங்களில் அறியலாம்.