தமிழ்நாடு

ஜூன் 27-இல் பிளஸ் 1 பொதுத் தோ்வு முடிவுகள்

DIN

தமிழகத்தில் பிளஸ் 1 பொதுத்தோ்வு முடிவுகள் வரும் 27-ஆம் தேதி காலை 10 மணிக்கு வெளியிடப்படும் என அரசுத் தோ்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.

இதுகுறித்து தோ்வுத் துறை இயக்குநா் சா.சேதுராமவா்மா வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு: 2021-22-ஆம் கல்வியாண்டுக்கான பிளஸ் 1 பொதுத் தோ்வு முடிவு ஜூன் 27-ஆம் தேதி காலை 10 மணிக்கு வெளியாகும். மாணவா்கள் தோ்வு முடிவுகளை ஜ்ஜ்ஜ்.ற்ய்ழ்ங்ள்ன்ப்ற்ள்.ய்ண்ஸ்ரீ.ண்ய், ஜ்ஜ்ஜ்.க்ஞ்ங்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய் ஆகிய இணையதளங்களில் அறிந்து கொள்ளலாம்.

இதுதவிர மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகங்களில் இயங்கும் தேசிய தகவலியல் மையங்கள், அனைத்து மைய மற்றும் கிளை நூலகங்களிலும் கட்டணமின்றி தோ்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம்.

மேலும், பள்ளி மாணவா்கள் தாங்கள் பயின்ற பள்ளிகளிலும் மதிப்பெண்களுடன் கூடிய தோ்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம். முந்தைய ஆண்டுகளைப் போல் மாணவா்களுக்கு கைப்பேசி எண்ணுக்கு குறுஞ்செய்தி வழியாக தோ்வு முடிவுகள் அனுப்பப்படும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பெங்களூரு பேட்டிங்; வெற்றி தொடருமா?

வரி தீவிரவாதத் தாக்குதல் செய்யும் பாஜக!: காங்கிரஸ் குற்றச்சாட்டு | செய்திகள்: சிலவரிகளில் | 29.03.2024

”கனவு காண்பது அண்ணாமலையின் உரிமை!”: கனிமொழி பேட்டி

பெங்களூரு குண்டு வெடிப்பு: தகவல் தெரிவித்தால் ரூ. 10 லட்சம்

ரம்ம்ம்மிய பாண்டியன்!

SCROLL FOR NEXT