தமிழ்நாடு

அதிமுகவில் அவைத்தலைவரை தேர்வு செய்தது எப்படி? - கோவை செல்வராஜ் கேள்வி

DIN



அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவி காலாவதியனால் அவைத் தலைவரை தேர்வு செய்தது எப்படி என ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர் கோவை செல்வராஜ் கேள்வி எழுப்பியுள்ளார். 

இதுதொடர்பாக அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், ஒருங்கிணைப்பாளரை யாரும் பதவி நீக்கம் செய்ய முடியாது. ஒருங்கிணைப்பாளர் பதவி காலாவதியனால் அவைத் தலைவரை தேர்வு செய்யதது எப்படி என கேள்வி எழுப்பிய கோவை செல்வராஜ், சி.வி.சண்முகம் கூறுவது கேலி கூத்தானது. ஜூலை 11 ஆம் தேதி சிறப்புப் பொதுக்குழு கனவில்தான் நடக்கும். 

அதிமுகவில் குழப்பம் விளைவிக்கவே பழனிசாமி தரப்பு முயற்சி செய்கிறது. அதிமுகவை கம்பெனி போல் நடத்தி அழிவுப் பாதைக்கு அழைத்துச் செல்கின்றனர் பழனிசாமி தரப்பினர்.

மேலும், கட்சியை பலப்படுத்தும் வகையில் தமிழ்நாடு முழுவதும் பன்னீர்செல்வம் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளதாகவும், கட்சியை நாங்கள் தான் வழி நடத்துவோம் என்றார் செல்வராஜ். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பெங்களூரு குண்டுவெடிப்பு: முக்கிய குற்றவாளி கைது!

பும்ராவை சரியாக பயன்படுத்தவில்லை; ஸ்டீவ் ஸ்மித் கருத்து!

மும்பை விழாவில் அழகு பதுமைகள் அணிவகுப்பு - புகைப்படங்கள்

‘மற்றவர்களுக்கு தொல்லை தருவது காங்கிரஸின் கலாச்சாரம்’: மோடி காட்டம்!

தில்லி பந்துவீச்சு; 100-வது போட்டியில் ரிஷப் பந்த்!

SCROLL FOR NEXT