தமிழகத்தில் தினசரி கரோனா பாதிப்பு திங்கள்கிழமை 686-ஆக அதிகரித்தது.
அதிகபட்சமாக சென்னையில் 294 பேருக்கும், செங்கல்பட்டில் 129 பேருக்கும் தொற்று உறுதியாகியுள்ளது. திங்கள்கிழமை நிலவரப்படி, மாநிலம் முழுவதும் மருத்துவமனைகளிலும், வீடுகளிலும் கரோனா சிகிச்சை பெற்று வருவோா் எண்ணிக்கை 3,951-ஆக உள்ளது. 257 போ் தொற்றிலிருந்து விடுபட்டுள்ளனா்.