தமிழ்நாடு

அதிமுக சார்பில் கோவை செல்வராஜ் பங்கேற்பார்: ஓபிஎஸ் கடிதம்

DIN

சென்னை: தேர்தல் ஆணையத்தின் ஆலோசனை கூட்டத்தில் அதிமுக சார்பில் கோவை செல்வராஜ் பங்கேற்பார் என தேர்தல் ஆணையத்திற்கு ஓபிஎஸ் கடிதம் எழுதியுள்ளார். 

தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹுக்கு எழுதியுள்ள கடிதத்தில் ஓ.பன்னிர்செல்வம் தகவல் தெரிவித்துள்ளார்.

இபிஎஸ் தரப்புக்கு தேர்தல் ஆணையம் அழைப்பு விடுத்ததாக தகவல் வெளியான நிலையில், தேர்தல் ஆணையத்திற்கு ஓ.பன்னீர் செல்வம் கடிதம் எழுதியுள்ளார்.

வாக்காளர் பட்டியல் பற்றிய ஆலோசனையில் இபிஎஸ் தரப்பில் ஜெயக்குமார், பொள்ளாச்சி ஜெயராமன் பங்கேற்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

வருகிற ஆகஸ்ட் 1 ஆம் தேதி அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடன் மாநில தலைமை தேர்தல் ஆணையம் ஆலோசனை மேற்கொள்ள உள்ளது. 

நாடு முழுவதும் வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான பணி வரும் ஆகஸ்ட் 1 ஆம்  தேதி தொடங்குகிறது. வருகிற 2023 மார்ச் 31 ஆம் தேதிக்குள் இந்த பணிகளை முடிக்க வேண்டும் என்று மாநில தேர்தல் ஆணையங்களுக்கு இந்திய தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. 

இந்நிலையில், சென்னையில் ஆகஸ்ட் 1 - ஆம் தேதி தமிழகத்தில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடன் மாநில தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு ஆலோசனை மேற்கொள்ள உள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பெண்ணின் உடல் மீது ஹமாஸ் பவனி: ‘இது சிறந்த புகைப்படமா?’

சிங்கத்தின் வேட்டை தொடரட்டும்...

ஃபேமிலி ஸ்டார்: தமிழ் டிரைலர்!

ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் முன்னேறிய தனஞ்ஜெயா!

அறிவோம்...

SCROLL FOR NEXT