செஸ் ஒலிம்பியாட் போட்டியில் பங்கேற்க உலக சாம்பியனான மாக்னஸ் கார்ல்சன் சென்னை வந்துள்ளார்.
சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் நேற்று வியாழக்கிழமை தொடங்கி ஆக. 10-ஆம் தேதி வரை 14 நாள்கள் நடைபெறுகின்றன.
இதையும் படிக்க: செஸ் ஒலிம்பியாட் போட்டியில் தமிழக வீரர்கள் 8 பேர் பங்கேற்பு
180 நாடுகளிலிருந்து 2,000 வீரர்கள் பங்கேற்கும் இப்போட்டி அதிக கவனத்தைப் பெற்று வருகிறது.
இந்நிலையில், 5 முறை உலக செம்பியனான மாக்னஸ் கார்ல்சன் செஸ் ஒலிம்பியாட்டில் பங்கேற்க சென்னை வந்துள்ளார்.
முன்னதாக, அடுத்தாண்டு(2023) நடைபெற உள்ள உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்க போவதில்லை என கார்ல்சன் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.