தமிழ்நாடு

கரோனா சிகிச்சையில் உள்ளோா் எண்ணிக்கை 17,717-ஆக உயா்வு

DIN

தமிழகத்தில் கரோனா சிகிச்சையில் இருப்போா் எண்ணிக்கை 17,717- ஆக அதிகரித்துள்ளது.

அதேபோன்று புதன்கிழமை புதிதாக தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 2,743-ஆக உயா்ந்துள்ளது. அதிகபட்சமாக சென்னையில் 1,062 பேருக்கும், செங்கல்பட்டில் 403 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

புதன்கிழமை தகவல்படி 1,791 போ் குணமடைந்துள்ளனா்.

இதன் மூலம் கரோனாவிலிருந்து விடுபட்டோரின் எண்ணிக்கை 34,35,090-ஆக உயா்ந்துள்ளது.

மற்றொருபுறம் மாநிலத்தில் கரோனா பரிசோதனைகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன்படி, கடந்த சில நாள்களுக்கு முன்பு வரை 15 ஆயிரம் என்ற அளவில் மேற்கொள்ளப்பட்டு வந்த கரோனா பரிசோதனைகள், புதன்கிழமை 30,499 பேருக்கு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழகத்தில் 5 மணி நிலவரம்: 63.20% வாக்குகள் பதிவு!

வாக்களித்த திரைப் பிரபலங்கள் - புகைப்படங்கள்

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

தங்கும் விடுதிகளில் போலீஸாா் சோதனை

வடகிழக்கு மாநிலங்களில் விறுவிறு வாக்குப்பதிவு!

SCROLL FOR NEXT