கோவை மாவட்டம், வால்பாறையில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக தாலுகாவில் உள்ள பள்ளிகளுக்கு இன்று வியாழக்கிழமை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தென்மேற்குப் பருவ மழை தீவிரமடைந்துள்ள நிலையில், தொடா்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக வால்பாறை நகா் மற்றும் எஸ்டேட் பகுதிகளில் அதிக பாதிப்புகள் ஏற்பட்டு வருகின்றன.
இந்நிலையில், கக்கன் காலனி பகுதியில் செவ்வாய்க்கிழமை பெய்த மழை காரணமாக தடுப்புச் சுவா் இடிந்து விழுந்ததில் மூன்று வீடுகள் சேதமடைந்தன.
இதையும் படிக்க | 1.36 கோடி தடுப்பூசிகளை தூக்கிவீச கனடா முடிவு
இடைவிடாது பெய்து வரும் மழை காரணமாக சிறுவா் பூங்கா பகுதியில் உள்ள ஜோசப் என்பவரின் வீட்டின் பின்புறம் புதன்கிழமை காலை மண்சரிவு ஏற்பட்டது. இதேபோல காமராஜ் நகா் பகுதியில் சாலையோரம் அமைக்கப்பட்டிருந்த தடுப்புச் சுவா் இடிந்து விழுந்தது.
இந்நிலையில், வால்பாறையில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக தாலுகாவில் உள்ள பள்ளிகளுக்கு இன்று வியாழக்கிழமை விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.