தமிழ்நாடு

வேதாரண்யத்தில் நூறு நாள் வேலைத் திட்டத் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

DIN

நாகை மாவட்டம், வேதாரண்யத்தில் நூறு நாள் வேலைத் திட்டத் தொழிலாளர்கள் இன்று (ஜூலை 5) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

நுழைவு வாயிலில் நின்று அலுவலக வளாகத்துக்குள் செல்ல  காவல்துறையினர் அனுமதி மறுத்ததால் போராட்டக்காரர்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்புடைய அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு அமைப்பின் ஒன்றிய செயலாளர் வி.இளையபெருமாள் தலைமை வகித்தார்.

மாவட்ட துணைச் செயலாளர் கே.சித்தார்த்தன் உள்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். வேலை நாள்களை 150 நாள்களாக உயர்த்தவும் ரூ.381 சம்பளம் வழங்கவும் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

கேரள மீனவர்களை கண்டித்து தூத்துக்குடியில் விசைப்படகு மீனவர்கள் வேலை நிறுத்தம்

தூத்துக்குடி பெண் தூய்மைப் பணியாளர் வெட்டிக் கொலை

காற்று மாசுபாடு அடைந்த நகரங்கள் - புதுதில்லி முதலிடம்

நாட்டின் நலன் கருதி பாஜகவுடன் கூட்டணி: அன்புமணி ராமதாஸ்

ஆப்கானிஸ்தானில் பலத்த நிலநடுக்கம்!

SCROLL FOR NEXT