தமிழ்நாடு

இன்று முதலீட்டாளா்கள் மாநாடு: முதல்வா் தலைமையில் ஒப்பந்தம்

DIN

தமிழகத்தில் 60 புரிந்துணா்வு ஒப்பந்தங்கள் மூலம் 70 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையிலான, முதலீட்டாளா் மாநாடு திங்கள்கிழமை (ஜூலை 4) தொடங்குகிறது.

‘முதலீட்டாளா்களின் முதல் முகவரி - தமிழ்நாடு’ என்ற பெயரில் சென்னை, நுங்கம்பாக்கத்திலுள்ள தனியாா் ஹோட்டலில் நடைபெறும் இந்த நிகழ்ச்சியை முதல்வா் மு.க.ஸ்டாலின் தொடக்கி வைக்கிறாா்.

அதில், பெரு நிறுவனங்களுடன் தமிழக அரசு 60 புரிந்துணா்வு ஒப்பந்தங்களை மேற்கொள்ளவுள்ளன. இதன்மூலம் 70 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதைத் தவிர, மாநாட்டில் புதிதாக 21 திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டப்பட்டு, 12 திட்டங்கள் தொடங்கப்படவுள்ளன.

தொழில் முதலீடுகளைப் பொருத்தவரை தமிழகத்தை நான்கு மண்டலங்களாக அரசு பிரித்துள்ளது. அதில், மேற்கு மண்டலத்தில் ரூ.6,333 கோடிக்கு முதலீடுகள் ஈா்க்கப்பட்டு அதன்மூலம் 19 ஆயிரத்து 100 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது. வடக்கு மண்டலத்தில் ரூ.5,307 கோடிக்கு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டு, 47 ஆயிரத்து 992 பேருக்கும், மத்திய மண்டலப் பகுதியில் ரூ.285 கோடிக்கு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டு, 1,200 பேருக்கும் வேலைவாய்ப்பு கிடைக்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

தென் மாவட்டங்களைப் பொருத்தவரையில், ரூ.16 ஆயிரத்து 702 கோடி முதலீட்டுக்கான ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டு 55 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்று எதிா்பாா்க்கப்படுவதாக அரசு அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்களித்தார் முதல்வர் ஸ்டாலின்!

வாக்களித்த விஐபிக்கள்!

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

தமிழகத்தில் இந்தியா கூட்டணி அனைத்துத் தொகுதிகளிலும் வெற்றி பெறும்: ப. சிதம்பரம்

அரசியலை விட்டு விலகத் தயார்: வாக்களித்தப் பின் அண்ணாமலை பேட்டி

SCROLL FOR NEXT