தமிழ்நாடு

ஈரோடு: விசைத்தறி உரிமையாளர்கள் வேலை நிறுத்தம்

DIN

ரயான் துணிகளுக்கு உரிய விலை கிடைக்காததால் ரயான் துணி உற்பத்தி செய்யும்  விசைத்தறி உரிமையாளர்கள் ஒரு வார கால  உற்பத்தி நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 

ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு,  லக்காபுரம்,  சித்தோடு போன்ற பல்வேறு பகுதிகளில் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விசைத்தறிகள் மூலம்  ரயான் துணி வகை உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றன.

இதன் மூலம் சுமார் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் வேலை வாய்ப்பு பெற்று வந்த நிலையில், கடந்த சில மாதங்களாக  ரயான் நூல் விலையில் எவ்வித மாற்றமும் ஏற்படவில்லை. எனினும் உற்பத்தி செய்யப்படும்  ரயான் துணிக்கு 120 கிராமிற்கு இரண்டு ரூபாய் நஷ்டம் அடைவதாலும் ரயான் உற்பத்தி செய்யும் விசைத்தறி உரிமையாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

எனவே இன்றுமுதல் ஒரு வார காலத்திற்கு உற்பத்தி நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த உற்பத்தி நிறுத்த போராட்டத்தால் சுமார் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட விசைத்தறி தொழிலாளர்கள் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

3 நாள் தொடர் ஏற்றத்துக்கு முற்றுப்புள்ளி: இன்று சரிவுடன் தொடங்கிய பங்குச் சந்தை

மணல் முறைகேடு: அமலாக்கத்துறையில் 5 மாவட்ட ஆட்சியர்கள் ஆஜர்!

பாட்னாவில் ஜேடியு தலைவர் சுட்டுக் கொலை

தங்கம் விலை சற்று குறைவு: இன்றைய நிலவரம்!

எடை குறைப்பு சிகிச்சையில் இளைஞா் பலி: விசாரணைக் குழு அமைப்பு

SCROLL FOR NEXT