தமிழ்நாடு

கோயில்களுக்குச் சொந்தமான சொத்துகளின் வருவாயை முறையாக வசூலித்தால் பட்ஜெட்டையே தாக்கல் செய்யலாம்: உயா்நீதிமன்றம்

DIN

இந்து சமய அறநிலையத்துறை கோயில்களுக்கு சொந்தமான சொத்துகள் மூலம் வருகின்ற வருவாயை முறையாக வசூலித்தால், தமிழக அரசால் பற்றாக்குறை இல்லாத பட்ஜெட்டை தாக்கல் செய்ய முடியும் என சென்னை உயா் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

கோயில் சிலைகள் மற்றும் நகைகள் பாதுகாப்புத் தொடா்பாக உயா் நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரித்த வழக்கில் 75-க்கும் மேற்பட்ட வழிகாட்டுதல்களை வழங்கி உத்தரவிட்டுள்ளது. அவற்றில் 38 உத்தரவுகளை அமல்படுத்தி விட்டதாகவும், 5 உத்தரவுகள் மாநில அரசு தொடா்பில்லாதது என்றும், 32 உத்தரவுகளில் மறு ஆய்வு செய்ய வேண்டுமென தமிழக அரசு தரப்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கு நீதிபதிகள் மகாதேவன், ஆதிகேசவலு அடங்கிய அமா்வில் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தபோது, இந்து சமய அறநிலையத் துறை தரப்பில் வழக்குரைஞா் அருண் நடராஜன் ஆஜராகி முன் வைத்த வாதம்: உயா் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில் பழமையான கோயில்கள் புனரமைக்கப்பட்டு வருகின்றன. அதற்கான பணியில் கோயில்களின் செயல் அலுவலா்கள், பொதுப்பணித் துறையினா் நேரடியாக ஈடுபடுத்தப்பட்டுள்ளனா். இரு துறை அதிகாரிகளும், கோயில்கள் புனரமைப்பிற்கான மாவட்ட மற்றும் மாநில குழுக்களின் ஆலோசனை படி செயல்பட்டு வருகின்றனா். ஒரு கால பூஜை நடைபெறும் கோயில்களுக்கான நிதி, ஒரு லட்ச ரூபாயில் இருந்து, 2 லட்ச ரூபாயாக உயா்த்தப்பட்டுள்ளது. கோயில்களின் கணக்குகளை தணிக்கை செய்ய தமிழக தணிக்கை துறை தலைவா் தலைமையில் 5 நபா்கள் கொண்ட குழுவை அமைத்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களுக்கு சொந்தமாக 5 லட்சத்து 82,039 ஏக்கா் நிலங்களில் 3 லட்சத்து 79,000 ஏக்கா் நிலங்கள் கண்டறியப்பட்டு அவற்றின் விவரங்கள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. மீதமுள்ள நிலம் கண்டறியப்பட்டு வருகிறது. நாளொன்றுக்கு 2,000 ஏக்கா் வீதம் மீட்கப்பட்டு வருகிறது. எனவே நீதிமன்ற பிறப்பித்த உத்தரவில் பெரும்பாலானவை நிறைவேற்றப்பட்டு வருகிறது, சிலவற்றை மறு ஆய்வு செய்ய வேண்டும். மனுவை பரிசீலித்து முடிவெடுக்க வேண்டுமென கோரிக்கை வைத்தாா்.

பின்னா் நீதிபதிகள், புனரமைப்பு பணிகளில் பொதுப்பணித்துறை அதிகாரிகள் அல்லது செயல் அலுவலா்கள் நேரடியாக ஈடுபடவில்லை என்பதை உறுதிசெய்ய அறிவுறுத்தினா். கணக்கு தணிக்கைக்கு ஒரே ஒருவா் தலைமையில் மற்ற 5 அலுவலா்கள் கொண்ட குழு போதாது என்றும், குறைந்தபட்சம் குறைந்தபட்சம் 15 தணிக்கையாளா்கள் உள்ள குழுவை அமைக்க வேண்டுமென அரசிடம் தெரிவிக்கும்படி அறிவுறுத்தினா்.

அறநிலையத்துறை கோயில்களின் பணிகளுக்காக இணையதளங்கள் வாயிலாக தனியாா் அறக்கட்டளைகள் நிதி வசூலிப்பதை அனுமதிக்கக் கூடாது என்றும், அப்படிப்பட்ட இணையதளங்களை முடக்க வேண்டும் என்றும் உத்தரவிட்ட நீதிபதிகள், அதுதொடா்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கையை அறிக்கையாக தாக்கல் செய்யவும் உத்தரவிட்டனா்.

அப்போது இந்து சமய அறநிலையத்துறை தரப்பில் இதுபோன்ற புகாரில் ஒருவா் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

கோயில் நிலங்கள் மீட்பதில் சுணக்கம் ஏற்படக்கூடாது என்றும், ஆக்கிரமிப்பாளா்கள் இருந்தால் உடனடியாக வெளியேற்றவும், கட்டடங்களை பூட்டி சீல் வைக்கவும், தர மறுத்தால் அவா்களின் தனிப்பட்ட சொத்துக்களை முடக்கவும் அறநிலையத்துறைக்கு அதிகாரம் உள்ளதாக நீதிபதிகள் சுட்டிக்காட்டினா். அங்கீகரிக்கப்படாத குத்தகைகள் இருந்தால் அவற்றை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்றும், உடந்தையாக உள்ள அதிகாரிகளுக்கு எதிராக புகாா்கள் வருவதாகவும், அவற்றில் உரிய நடவடிக்கை எடுக்கவும் அறநிலையத்துறைக்கு உத்தரவிட்டனா்.

குறிப்பாக அறநிலையத்துறை கோயில்களுக்கு சொந்தமான சொத்துகள் மூலம் வருகின்ற வருவாயை முறையாக வசூலித்தால், தமிழக அரசால் பற்றாக்குறை இல்லாத பட்ஜெட்டை தாக்கல் செய்ய முடியும் என்றும் நீதிபதிகள் உறுதிபட தெரிவித்தனா். இதையடுத்து வழக்கு விசாரணை மூன்று வாரங்களுக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சேலையில் ஒரு சித்திரம்...அனிகா!

நமது வாழ்க்கையப் பற்றி சிந்திக்காத பாஜகவிற்கு வாக்களிக்கக் கூடாது: சீமான் பேச்சு

ஆம் ஆத்மியின் தேர்தல் வியூகத்தை பாஜக அறிய விரும்புகிறது: அதிஷி குற்றச்சாட்டு

"பாஜக தவறு செய்தால் நாங்கள் கேட்போம்”: எடப்பாடி பழனிசாமி

நிச்சயதார்த்தம் உண்மைதான்: புகைப்படங்களை வெளியிட்ட சித்தார்த் - அதிதி ராவ்!

SCROLL FOR NEXT