தமிழ்நாடு

தற்காலிக ஆசிரியர் நியமனம்: ஜூலை 4 முதல் விண்ணப்பிக்கலாம்; திருத்திய வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு!

DIN

தற்காலிக ஆசிரியர்கள் நியமனம் தொடர்பாக  பள்ளிக்கல்வித் துறை வழிகாட்டு நெறிமுறைகளில் திருத்தம் செய்து வெளியிட்டுள்ளது. 

அரசுப் பள்ளிகளில் இரண்டாம் நிலை மற்றும் முதுநிலை பட்டதாரி ஆசிரியா்கள் 13,331 பேரை தலைமை ஆசிரியா் உள்ளிட்டோா் அடங்கிய பள்ளி நிா்வாகக் குழு மூலம் தற்காலிக ஆசிரியர்களாக நியமிக்க பள்ளிக்கல்வித் துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. 

இந்நிலையில் இதில் முறைகேடுகள் நடப்பதாக வந்த புகார்களை அடுத்து, தற்காலிக ஆசிரியர்கள் நியமனம் செய்ய சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை இடைக்காலத் தடை விதித்தது. 

இந்நிலையில், தற்காலிக ஆசிரியர்கள் நியமனம் தொடர்பாக  பள்ளிக்கல்வித் 
துறை திருத்திய வழிகாட்டு நெறிமுறைகளை இன்று வெளியிட்டுள்ளது. 

அதன்படி, ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு முன்னுரிமை அளிக்கலாம். 

இல்லம் தேடி கல்வித் திட்டத்தில் பணியாற்றுபவர்களுக்கு வாய்ப்பு வழங்கலாம். 

முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணிக்கான டி.ஆர்.பி. சான்றிதழ் சரிபார்ப்பில் பங்கேற்றவர்களை நியமிக்கலாம். 

திறமை அடிப்படையில் ஆசிரியர்களை நியமிக்க வேண்டும்.  வகுப்பறையில் பாடம் நடத்த அறிவுறுத்தி அதன் அடிப்படையில் அவர்களின் திறனை அறியலாம். 

இடைநிலை ஆசிரியர் பதவிக்கு டெட் தேர்வு தாள் -1ல் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 

பட்டதாரி ஆசிரியர் பதவிக்கு டெட் தேர்வு தாள் - 2ல் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது. 

மேலும், தகுதியானவர்கள் வருகிற ஜூலை 4 முதல் ஜூலை 6 ஆம் தேதி மாலை 5 மணி வரை விண்ணப்பிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பெங்களூரு குண்டுவெடிப்பு: முக்கிய குற்றவாளி கைது!

பும்ராவை சரியாக பயன்படுத்தவில்லை; ஸ்டீவ் ஸ்மித் கருத்து!

மும்பை விழாவில் அழகு பதுமைகள் அணிவகுப்பு - புகைப்படங்கள்

‘மற்றவர்களுக்கு தொல்லை தருவது காங்கிரஸின் கலாச்சாரம்’: மோடி காட்டம்!

தில்லி பந்துவீச்சு; 100-வது போட்டியில் ரிஷப் பந்த்!

SCROLL FOR NEXT