தமிழ்நாடு

பள்ளி, கல்லூரிகளில் முகக்கவசம் கட்டாயம்!

DIN

சென்னை: தமிழகத்தில் அனைத்து பள்ளி, கல்லூரிகளிலும் முகக்கவசம் அணிவது கட்டாயம் என பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.

பள்ளிக்கு வரும் அனைவரின் உடல் வெப்பநிலையை கட்டாயம் பரிசோதிக்க வேண்டும் என்றும் உத்திரவிட்டுள்ளது. மேலும், சான்றிதழ்களை பெற அதிக அளவில் மாணவர்கள் செல்வதால் தொற்று ஏற்படாமல் தடுக்கும் நோக்கில், நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளதாக பள்ளிக்கல்வித் துறை ஆணை பிறப்பித்துள்ளது.

மேலும், தமிழகத்தில் அனைத்து பள்ளி, கல்லூரிகளிலும் முகக்கவசம் அணிவது கட்டாயம் என மக்கள் நல்வாழ்வுத்துறை  தெரிவித்துள்ளது.

கரோனா பாதிப்பு தமிழகத்தில் 5 சதவீதத்துக்கும் குறைவாகவே உள்ளது. கரோனா பாதிப்பு அதிகமானால் கோவிட் கேர் செண்டர்களை மீண்டும் திறக்க தயார் நிலையில் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மற்ற மாநிலங்களில் ஒப்பிடும்போது தமிழகத்தில் கரோனா தாக்கம் குறைவாக உள்ளது என மக்கள் நல்வாழ்வுத்துறை  தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ராஜஸ்தான் பந்துவீச்சு; மீண்டும் அணியில் ஜோஸ் பட்லர்!

"இந்தியா வளர்ச்சியடைய 400 இடங்களுக்குமேல் வெற்றி வேண்டும்!” | செய்திகள்: சிலவரிகளில் | 16.04.2024

பகல் நிலவு.. நேகா ஷெட்டி!

சிஎஸ்கேவுக்காக 5 ஆயிரம் ரன்களைக் கடந்து எம்.எஸ்.தோனி சாதனை!

அதிமுகவை விமர்சிக்க பாஜகவுக்கு தகுதியில்லை: இபிஎஸ்

SCROLL FOR NEXT