தமிழ்நாடு

திருப்புவனத்தில் ஓய்வுபெற்ற போக்குவரத்து கழகத் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

DIN

மானாமதுரை: சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அரசு போக்குவரத்துக் கழகப் பணிமனை முன்பு ஓய்வு பெற்ற அரசுப் போக்குவரத்துக் கழகத் தொழிலாளர் சங்கம் (சி.ஐ.டி.யூ) சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

அரசுப் போக்குவரத்துக் கழகத் தொழிலாளர்கள் ஓய்வு பெறும் நாளிலேயே அவர்களுக்கான பணப் பலன்களை வழங்க வேண்டும், போக்குவரத்து கழகத் தொழிலாளர்களுக்கு 77 மாத காலமாக வழங்க வேண்டிய அகவிலைப்படியை உடனடியாக வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் மதுரை மண்டலச் செயலாளர் கணேசன் தலைமை வகித்தார். ஓய்வு பெற்ற அரசுப் போக்குவரத்துக் கழகத் தொழிலாளர்கள் இதில் திரளாக பங்கேற்று கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பினர். பின்னர் கோரிக்கைகளை வலியுறுத்தி சங்கத்தின் நிர்வாகிகள் பேசினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பெங்களூரு குண்டுவெடிப்பு: முக்கிய குற்றவாளி கைது!

பும்ராவை சரியாக பயன்படுத்தவில்லை; ஸ்டீவ் ஸ்மித் கருத்து!

மும்பை விழாவில் அழகு பதுமைகள் அணிவகுப்பு - புகைப்படங்கள்

‘மற்றவர்களுக்கு தொல்லை தருவது காங்கிரஸின் கலாச்சாரம்’: மோடி காட்டம்!

தில்லி பந்துவீச்சு; 100-வது போட்டியில் ரிஷப் பந்த்!

SCROLL FOR NEXT