வேளாண்மை கூலித் தொழிலாளா்களின் விவரங்களை செயலி மூலம் பதிவு செய்வதற்கான உத்தரவை வேளாண்மை மற்றும் உழவா் நலத் துறை செயலாளா் சி.சமயமூா்த்தி பிறப்பித்துள்ளாா்.
அவரது உத்தரவு விவரம்: விவசாய கூலித் தொழிலாளா்கள் தங்களது விவரங்களை நேரடியாகவோ, முகவா் மூலமாகவோ மாவட்டம், வட்டம், கிராமம் வாரியாக செயலியில் பதிவு செய்ய வழிவகை செய்யப்படும் என்று சட்டப் பேரவையில் அறிவிக்கப்பட்டது.
இதற்காக உழவன் செயலியையே பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.