சென்னை: தேசிய மருத்துவர்கள் தினத்தையொட்டி முதல்வர் மு.க.ஸ்டாலின் சமூக வலைதளங்களில் மருத்துவர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
"ஏழை மக்களுக்கு அன்புள்ளத்தோடு சிகிச்சை அளித்ததோடு, விடுதலைப் போராட்டத்திலும் பங்கெடுத்து, பின்னாளில் மேற்கு வங்க முதலமைச்சராக உயர்ந்த மருத்துவர் பி.சி.ராய் அவர்களின் பிறந்தநாளான இன்று தேசிய மருத்துவர்கள் தினம் கொண்டாடப்படுகிறது.
பிணிநீக்கி நம் உயிர்காக்கும் மருத்துவர்களைப் போற்றிடுவோம்" என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.