தமிழ்நாடு

பகலில் வெயில் கொளுத்தினால்.. தமிழ்நாடு வெதர்மேன் சொல்லும் தகவல்

DIN

சென்னை: சென்னை மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் கடந்த ஒரு சில நாள்களாக இரவு நேரத்தில் பலத்த மழை முதல் கனமழை பெய்து வருகிறது.

வியாழக்கிழமை இரவு சென்னையின் பல பகுதிகளிலும், புறநகர்ப் பகுதிகளிலும் கனமழை கொட்டித் தீர்த்தது.

அம்பத்தூர், ஆவடி, திருநின்றவூர், அண்ணாநகர் உள்ளிட்ட சென்னை மற்றும் சென்னையின் புறநகர்ப் பகுதிகளிலும் கனமழை பெய்தது.

இது குறித்து தமிழ்நாடு வெதர்மேன் கூறியிருப்பதாவது, சென்னையில் நேற்று பல்வேறு பகுதிகளில் பலத்தமழை பெய்துள்ளது.

மழை நிலவரம்
வில்லிவாக்கம் - 62 மில்லி மீட்டர்
வண்ணாரப்பேட்டை - 51 மில்லி மீட்டர்
வியாசார்பாடி - 45 மில்லி மீட்டர்
நுங்கம்பாக்கம் - 37 மில்லி மீட்டர்
மாதவரம் - 35 மில்லி மீட்டர்
புழல் - 30 மில்லி மீட்டர்
காஞ்சிபுரம் - 17 மில்லி மீட்டர்
வானகரம் - 10 மில்லி மீட்டர்
பொத்தேரி - 8 மில்லி மீட்டர்
செவ்வாய்பேட்டை - 8 மில்லி மீட்டர்

வரும் நாள்களிலும், பகலில் நல்ல வெயில் கொளுத்தும்பட்சத்தில் இரவில் மழை பெய்யும். ஒரு வேளை உங்கள் பகுதியில் மழை பெய்யாவிட்டால், மறுநாள் நிச்சயம் பெய்யும் என்று தெரிவித்துள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஐபிஎல்: தில்லி அணிக்கெதிராக குஜராத் அணி முதலில் பந்துவீச்சு!

அபர்ணா தாஸ் - தீபக் பரம்போல் திருமணம் - புகைப்படங்கள்

அடுத்த 3 மணி நேரத்துக்கு 3 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

இந்தியா கூட்டணியின் ‘ஆண்டுக்கொரு பிரதமர் திட்டம்’ -பிரதமர் மோடி விமர்சனம்

2-ம் கட்டத் தேர்தல்: கேரளத்தில் குவிக்கப்படும் காவலர்கள்!

SCROLL FOR NEXT