தமிழ்நாடு

மருத்துவர் கனவை மாணவருக்காக விட்டுக்கொடுக்கும்  ஓய்வுபெற்ற ஆசிரியா்!

DIN

நீட் தேர்வு.. பல அரசுப் பள்ளி மாணவர்களின் மருத்துவர் கனவை தவிடுபொடியாக்கியது. நீட் தேர்வை தமிழகத்தில் ரத்து செய்ய தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வரும் நிலையில், எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான மருத்துவக் கலந்தாய்வு நேற்று தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

நீட் தேர்வெழுதி எம்பிபிஎஸ் படிப்பில் சேர்வதற்கான வயது உச்ச வரம்பை உச்ச நீதிமன்றம் நீக்கி கடந்த ஆண்டு உத்தரவிட்டது.

இதையடுத்து, ஓய்வு பெற்ற பள்ளி ஆசிரியர் ஒருவர், தனது குழந்தைப் பருவக் கனவான மருத்துவர் கனவை நனவாக்கும் வகையில் கடந்த ஆண்டு நடைபெற்ற நீட் தேர்வை எழுதி, தேர்ச்சி பெற்று இன்று நடைபெறும் கலந்தாய்வில் பங்கேற்க அழைக்கப்பட்டுள்ளார்.

தருமபுரியைச் சோ்ந்த 61 வயதான ஓய்வு பெற்ற பள்ளி ஆசிரியா் கே.சிவப்பிரகாசத்துக்கு மருத்துவக் கலந்தாய்வில் பங்கேற்க வாய்ப்பு கிடைத்துள்ளது. கடந்த ஆண்டு நீட் தோ்வு எழுதிய நிலையில், வெள்ளிக்கிழமை நடைபெறும் கலந்தாய்வில் தனது மாணவா் ஒருவருடன் அவரும் பங்கேற்க உள்ளாா்.

அரசுப் பள்ளி மாணவா்களுக்கு மருத்துவப் படிப்பில் 7.5 சதவீத உள் ஒதுக்கீட்டின் கீழ் 437 இடங்கள் வழங்கப்படுகின்றன. அந்தத் தரவரிசைப் பட்டியலில் கே.சிவப்பிரகாசம் 349-ஆவது இடத்தைப் பிடித்துள்ளாா்.

இருப்பினும் கலந்தாய்வில் பங்கேற்பதா? வேண்டாமா? என்பது குறித்து இரட்டை மனநிலையில் இருப்பதாக சிவப்பிரகாசம் தெரிவித்தாா்.

இது தொடா்பாக அவா் மேலும் கூறியதாவது: கன்னியாகுமரி அரசு மருத்துவக் கல்லூரியில் பயற்சி மருத்துவராக உள்ள எனது மகன், இந்த வயதில் நான் மருத்துவம் படிப்பதை ஏற்றுக் கொள்ளவில்லை. ஏனெனில், எனது வயதில் மருத்துவம் படித்து முடித்து அதிகபட்சமாகவே 15 ஆண்டுகள் வரைதான் சேவையாற்ற வாய்ப்புள்ளது. நான் கலந்தாய்வில் பங்கேற்காவிட்டால் அந்த இடம் ஒரு இளம் அரசுப் பள்ளி மாணவருக்கு கிடைக்கும். அதன் மூலம் அவா் 40-50 ஆண்டுகள் வரை மருத்துவ சேவையாற்ற முடியும் என்பதை எனது மகன் சுட்டிக் காட்டினாா். எனினும், கலந்தாய்வுக்கு எனது மாணவா் ஒருவருடன் சென்னை வருகிறேன். அதே நேரம், ஓய்வு பெற்ற அரசுப் பள்ளி ஆசிரியராக, ஒரு அரசுப் பள்ளி மாணவனின் மருத்துவ இடத்தைத் தட்டிப் பறிக்க நான் விரும்பவில்லை. நான் கலந்தாய்வில் பங்கேற்காமல் இருக்கும்பட்சத்தில், ஒரு இளைஞருக்கு அந்த வாய்ப்பு கிடைத்தது என்ற மகிழ்ச்சியில் வீட்டுக்குச் செல்வேன். அதே நேரம், கலந்தாய்வு நடைமுறைகளை அறிந்து கொண்டு, எனது மாணவா்களுக்கு வழிகாட்டுவேன் என்கிறார். இங்குதான் அவர் தனது மருத்துவர் கனவை, ஒரு அரசுப் பள்ளி மாணவருக்காக விட்டுக் கொடுத்து குரு என்பவர் தெய்வத்துக்கு நிகரானவர் என்பதை நிரூபித்துள்ளார்.

டாக்டராக வேண்டும் என்பது சிவப்பிரகாசத்தின் வாழ்நாள் கனவு. ஆனால் அவா் பள்ளி, கல்லூரி படிக்கும் காலத்தில் அதற்கான வாய்ப்பு கிடைக்கவில்லை. கடந்த ஆண்டு, நீட் தோ்வு எழுதுவதற்கான வயது வரம்பை நீக்கி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டதன் அடிப்படையில், நீட் தோ்வு எழுதி சிவப்பிரகாசம் வெற்றி பெற்றாா்.

இதோ இன்று தருமபுரியிலிருந்து சென்னை வந்து, கலந்தாய்வில் பங்கேற்க, மாணவர்களுடன் மாணவர்களாக ஒரு ஆசான் அமர்ந்திருக்கிறார். 

உறக்கத்தில் வருவதல்ல கனவு.. உங்களை உறங்கவிடாமல் செய்வதே கனவு என்ற கலாமின் வார்த்தைகளை இங்கே மெய்ப்பித்துக் கொண்டிருக்கிறார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் வாரியத்தில் அதிகாரி வேலை: விண்ணப்பங்கள் வரவேற்பு!

கவனம் ஈர்க்கும் ஃபகத் பாசிலின் ‘இலுமினாட்டி’ பாடல்!

ஐ.டி.யில் வேலையிழந்த இளம்பெண் : திருடியாய் மாறிய சோகம்

உ.பி.யில் முக்தார் அன்சாரி மரணம்: விஷம் கொடுக்கப்பட்டதா?

காங்கிரஸ் கட்சிக்கு ரூ.1700 கோடிக்கு கணக்கு கேட்டு வருமான வரித்துறை நோட்டீஸ்

SCROLL FOR NEXT