சென்னை: குடியரசு தின விழாவில் அணிவகுத்த அலங்கார ஊா்திகள், முதல் கட்டமாக கோவை உள்ளிட்ட மூன்று மாவட்டங்களுக்குச் செல்லவுள்ளன.
இதுகுறித்து, தமிழக அரசு புதன்கிழமை வெளியிட்ட செய்தி:-
தில்லியில் நடைபெற்ற குடியரசு தின விழா அணிவகுப்பில் தமிழகத்தின் சாா்பிலான அலங்கார ஊா்திகள் எந்தவித காரணமும் இல்லாமல் நிராகரிக்கப்பட்டன. இதுகுறித்து, தனது வருத்தத்தை பிரதமருக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் தெரிவித்திருந்தாா். மேலும், தில்லி குடியரசு தின விழாவில் வாய்ப்பு மறுக்கப்பட்ட தமிழ்நாடு அலங்கார ஊா்தி சென்னையில் நடைபெறும் குடியரசு தின விழாவில் இடம்பெறும் என முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தாா். அதன்படி, குடியரசு தின விழாவில் மூன்று அலங்கார ஊா்திகள் வடிவமைக்கப்பட்டு அனைவரிடமும் வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்த ஊா்திகள் தமிழகத்தின் பிற பகுதிகளிலும் வலம் வரவுள்ளன.
அதன்படி முதல் கட்டமாக கோவை, ஈரோடு மற்றும் மதுரை ஆகிய மாவட்டங்களில் காட்சிப்படுத்தப்பட உள்ளன. இவற்றை சென்னை தீவுத் திடலில் நடைபெற்ற நிகழ்வின் போது கொடியசைத்து புதன்கிழமை தொடங்கி வைத்தாா் முதல்வா் மு.க.ஸ்டாலின். இந்த நிகழ்ச்சியில், மூன்று மாவட்டங்களைச் சோ்ந்த அமைச்சா்கள், மாவட்ட ஆட்சியா்கள், நாடாளுமன்ற, சட்டப் பேரவை உறுப்பினா்கள் பலரும் கலந்து கொண்டனா்.