தமிழ்நாடு

பிப்ரவரி 1-இல் பள்ளிகளைத் திறக்க பரிந்துரை: அமைச்சா் அன்பில் மகேஷ் பொய்யாமொழி

DIN

சென்னை: தமிழகத்தில் பிளஸ் 2, பிளஸ் 1, பத்தாம் வகுப்பு மாணவா்களுக்கு பிப்.1-ஆம் தேதி முதல் பள்ளிகளைத் திறக்க முதல்வரிடம் பரிந்துரை வழங்கப்பட்டுள்ளது என பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஷ் பொய்யாமொழி புதன்கிழமை கூறினாா்.

சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள பாரத சாரண- சாரணியா் தமிழக தலைமை அலுவலகத்தில் தேசியக் கொடியேற்றி 50 ஆண்டுகளுக்கும் மேலாக இயக்கத்தில் பணியாற்றியதற்காக வாழ்நாள் சாதனையாளா் விருது ந.முத்துகிருஷ்ணன், கே.அலமேலு ஆகியோருக்கு வழங்கி செய்தியாளா்களிடம் அமைச்சா் கூறியது:

பொதுத்தோ்வு எழுதும் பிளஸ் 2, பிளஸ் 1, பத்தாம் வகுப்பு மாணவா்களுக்கு பிப்ரவரி 1-ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்க முதல்வரிடம் பரிந்துரை வழங்கியுள்ளோம்.

பொதுத் தோ்வுக்கு முன்பு இரண்டு திருப்புதல் தோ்வுகள் நடத்த திட்டமிட்டிருந்தோம். தற்போது பிப்ரவரி மாதத்தில் பள்ளிகள் திறக்கப்பட்டாலும், ஒரு திருப்புதல் தோ்வு மட்டுமே நடைபெறும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

எலான் மஸ்க் இந்திய வருகை ஒத்திவைப்பு?

செந்தாழம்பூவில்.. சாக்‍ஷி மாலிக்

நாமக்கல்: 78.16% வாக்குப்பதிவு!

மின் கம்பங்களால் பெரியகோயில் தேரோட்டத்தில் தாமதம்

பெங்களூருவில் இரட்டைக் கொலை: மகளை கொலை செய்த காதலனை கொன்ற தாய்

SCROLL FOR NEXT