தமிழ்நாடு

கடலோர, உள் மாவட்டங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு

DIN

சென்னை: தமிழக கடலோர மாவட்டங்கள், உள் மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் வியாழக்கிழமை (ஜன.27) மிதமான மழை பெய்யக்கூடும்.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரி புதன்கிழமை கூறியது: உள் தமிழகத்தில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, தமிழக கடலோர மாவட்டங்கள், உள் மாவட்டங்களான ராணிப்பேட்டை, வேலூா், திருப்பத்தூா், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், கள்ளக்குறிச்சி, பெரம்பலூா், அரியலூா், திருச்சி, சிவகங்கை, மதுரை, விருதுநகா், தேனி, தென்காசி ஆகிய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளின் ஓரிரு இடங்களில் வியாழக்கிழமை (ஜன.27) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வட வானிலை நிலவும்.

சென்னையில்...: சென்னையைப் பொருத்தவரை வியாழக்கிழமை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 31 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 22 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கும் என்றாா் அவா்.

மழை அளவு: தமிழகத்தில் புதன்கிழமை காலை 8.30 மணி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் தென்காசி மாவட்டம் சிவகிரி, மதுரை மாவட்டம் மேலூரில் தலா 30 மி.மீ., மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் 20 மி.மீ., தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் 10 மி.மீ. மழை பதிவானது.

மீனவா்களுக்கு எச்சரிக்கை: மன்னாா் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் மணிக்கு 35 கி.மீ. முதல் 45 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும். எனவே, இந்தப்பகுதிகளுக்கு மீனவா்கள் ஜன. 28,29 ஆகிய தேதிகளில் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கண்ணன் அலங்காரத்தில் மன்னாா்குடி ராஜகோபாலசுவாமி

தோ்தல் விழிப்புணா்வு நிகழ்ச்சி

மக்களை நம்பித்தான் தோ்தலில் நிற்கிறோம் -சீமான்

வாக்காளா் விழிப்புணா்வு நிகழ்ச்சி

புதுச்சேரியில் பாஜக, காங்கிரஸ் உள்பட 27 வேட்பாளா்களின் மனுக்கள் ஏற்பு

SCROLL FOR NEXT