தமிழ்நாடு

நகர்ப்புற தேர்தல்: சென்னையில் 45 பறக்கும் படைகள் அமைப்பு

DIN

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், பணப்பட்டுவாடாவை தடுக்க சென்னையில் 45 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் வருகின்ற பிப். 19ஆம் தேதி நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்குப்பதிவும், பிப். 22ஆம் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடைபெறும் என தேர்தல் ஆணையம் புதன்கிழமை அறிவித்தது.

இதனைத் தொடர்ந்து மாநிலம் முழுவதும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்ததையடுத்து 24 மணிநேரமும் வாகன சோதனை செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், 200 வார்டுகளை கொண்ட சென்னை மாநகராட்சி முழுவதும் பணப்பட்டுவாடாவை தடுக்க 45 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளது. வியாபரிகளிடமிருந்து பறிமுதல் செய்யப்படும் பணத்தை உரிய ஆவணம் சமர்பித்த பிறகு திருப்பி அளிக்கவும் வியாழக்கிழமை உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும், நகர்ப்புற தேர்தலை நடத்த சென்னையில் 37 உதவி தேர்தல் அலுவலர்களும் நியமனமிக்கப்பட்டுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிறைக்குச் செல்ல அஞ்சவில்லை: ராகுலுக்கு பினராயி விஜயன் பதிலடி

மணிப்பூரில் சில இடங்களில் வன்முறை; வாக்குப் பதிவு இயந்திரங்கள் சேதம்

சரிவிலிருந்து மீண்டது பங்குச்சந்தை: சென்செக்ஸ் 599 புள்ளிகள் உயா்வு!

வாக்குப் பதிவு மையங்களில் குழந்தைகள் பாதுகாப்பு அறை

திரைத் துறையினா் ஜனநாயக கடமை ஆற்றினா்

SCROLL FOR NEXT