தமிழ்நாடு

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்: திமுக நாளை ஆலோசனை

DIN


நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் குறித்து திமுக தலைவரும், முதல்வருமான மு.க. ஸ்டாலின் தலைமையிலான கட்சியின் மாவட்டச் செயலாளர்கள் மற்றும் நாடாளுமன்ற, சட்டப்பேரவை உறுப்பினர்கள் கூட்டம் நாளை (வியாழக்கிழமை) நடைபெறுகிறது.

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் குறித்த அறிவிப்பை மாநிலத் தேர்தல் ஆணையம் இன்று (புதன்கிழமை) வெளியிட்டது. பிப்ரவரி 19-ம் தேதி ஒரேகட்டமாக தேர்தல் நடைபெறும் என்றும் பிப்ரவரி 22-ம் தேதி வாக்குகள் எண்ணப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான கூட்டத்துக்கு திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அழைப்பு விடுத்துள்ளார்.

இதுபற்றி துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிவிப்பு:

"திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் குறித்து மாவட்டச் செயலாளர்கள் மற்றும் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் 27-1-2022 வியாழக்கிழமை மாலை 6 மணியளவில் காணொலி வாயிலாக நடைபெறும். 

அதுபோது மாவட்டச் செயலாளர்கள் மற்றும் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் தவறாமல் இக்கூட்டத்தில் கலந்து கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறேன்."

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் வாரியத்தில் அதிகாரி வேலை: விண்ணப்பங்கள் வரவேற்பு!

கவனம் ஈர்க்கும் ஃபகத் பாசிலின் ‘இலுமினாட்டி’ பாடல்!

ஐ.டி.யில் வேலையிழந்த இளம்பெண் : திருடியாய் மாறிய சோகம்

உ.பி.யில் முக்தார் அன்சாரி மரணம்: விஷம் கொடுக்கப்பட்டதா?

காங்கிரஸ் கட்சிக்கு ரூ.1700 கோடிக்கு கணக்கு கேட்டு வருமான வரித்துறை நோட்டீஸ்

SCROLL FOR NEXT