தமிழகத்தில் புதிதாக 13 பேருந்துகளை அமைப்பதற்கான அரசாணையை தமிழக அரசு புதன்கிழமை வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள ஆணையில்,
தமிழக அரசு, தமிழ்நாடு உள்கட்டமைப்பு வளர்சி நிறுவனம் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் நிதியிலிருந்து ரூ. 424 கோடி மதிப்பில் 13 இடங்களில் புதிய பேருந்து நிலையங்கள் கட்டுவதற்கான நிர்வாக அனுமதி வழங்கப்படுகிறது.
இதையும் படிக்க | தமிழ் வளர்ச்சித்துறை விருதுகள் அறிவிப்பு
அதன்படி, ஈரோடு, கடலூர், கரூர், காஞ்சிபுரம், திருத்தணி, திருமங்கலம், ராணிப்பேட்டை, திண்டிவனம், திருவண்ணாமலை, மன்னார்குடி, மயிலாடுதுறை, நாமக்கல், சங்கரன்கோவில் ஆகிய இடங்களில் புதிய பேருந்து நிலையங்கள் கட்டப்படவுள்ளன.