குடியரசு தின அணிவகுப்பில் தமிழ்நாடு ஊர்தி இடம்பெறுவது மறுக்கப்பட்டிருப்பதற்கு பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
தில்லியில் நடைபெறும் சுதந்திர நாள் மற்றும் குடியரசு நாள் விழா அணிவகுப்பில் சுதந்திரப் போராட்ட வீரர்களின் படங்களைக் கொண்ட ஊர்திகள் இடம்பெறும். வரும் குடியரசு நாள் விழா அணிவகுப்பிலிருந்து வ.உ. சிதம்பரனார், வேலுநாச்சியார், பாரதியார் உள்ளிட்டோர் இடம்பெற்றிருக்கும் தமிழ்நாட்டின் அலங்கார ஊர்தியை மத்திய அரசு நிராகரித்துள்ளது.
இதையும் படிக்க | குடியரசு நாள் அணிவகுப்பு; மாநிலங்களுக்கு அவமதிப்பு - வைகோ கண்டனம்
இதுதொடர்பாக முதல்வர் எழுதியுள்ள கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது:
"குடியரசு தின அணிவகுப்பில் தமிழ்நாட்டிலிருந்து நாட்டின் விடுதலைக்காகப் போராடிய வ.உ.சி., மகாகவி பாரதியார், இராணி வேலுநாச்சியார், மருது சகோதரர்கள் ஆகிய விடுதலைப் போராட்ட வீரர்களின் உருவங்கள் அடங்கிய ஊர்தி இடம்பெறுவது மறுக்கப்பட்டு இருப்பது ஏமாற்றம் அளிக்கிறது. பிரதமர் இதில் உடனே தலையிட்டு விடுதலைப் போராட்ட வரலாற்றில் தமிழ்நாட்டின் பங்களிப்பு இடம்பெறுவதை உறுதிசெய்ய வேண்டும்."