சென்னை மாநகராட்சி மேயர் பதவி பட்டியலின மகளிருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான இடஒதுக்கீடு குறித்த அரசாணையை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது. தாம்பரம், சென்னை மாநகராட்சி மேயர் பதவிகள் பட்டியலின மகளிருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. ஆவடி மாநகராட்சி பட்டியலினத்தவர்களுக்கு (பொது) ஒதுக்கப்பட்டுள்ளது.
இதுதவிர கோவை உள்ளிட்ட 9 மாநகராட்சிகள் மகளிருக்கு (பொது) ஒதுக்கப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.